மேலும் அறிய

Crime : குடும்ப சண்டை.. ஜன்னல் கண்ணாடிகள்.. மகளை கொடூரமாக கொன்ற தந்தை.. நடந்தது என்ன?

குடும்ப சண்டையின்போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடும்பசண்டையின் போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், பெண்ணின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகளும் காயமடைந்துள்ளனர்.

ஆனால், அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை இன்னும் கைது செய்யப்படவில்லை. தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும் உறவினர் ஒருவரால் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகரில் வசிக்கும் பீம்சென் (45) என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜன்னல் கண்ணாடியால் அவரை தாக்கியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். சண்டையில் தலையிட்டபோது அவர் தனது மகள்களைத் தாக்கி உள்ளார்.

இதனால், மகள் ஒருவரின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. மகளின் மார்பு மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தையடுத்து தந்தை அங்கிருந்து தப்பியோடி உள்ளார். காயமடைந்தவர்கள், உறவினர் ஒருவரின் உதவியை பெற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

"சிகிச்சையின் போது இளைய மகள் மரணம் அடைந்தார். மற்றொரு மகள் இன்னும் சிகிச்சையில் உள்ளார். மூன்றாவது மகள் மற்றும் அவர்களின் 42 வயதான தாயார் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரின் இளைய சகோதரர் ரோஷன் லால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேலை எதுவும் இல்லை என்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து விரிவாக விவரித்த அவர், "கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பு, எனது சகோதரர் ஆட்டோ ரிக்சாவை ஓட்டி வந்தார். ஊரடங்குக்கு பிறகு, அவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் காய்கறிகளை விற்று வந்தார்.

ஆனால், மூத்த மகளுக்கு வங்கியில் வேலை கிடைத்ததும், அவர் வேலையை விட்டுவிட்டு எதுவும் செய்யாமல் இருந்தார். குடிப்பழக்கத்துக்காக கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நடந்ததில்லை" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
Arun IPS: மெக்கானிக்கல் இன்ஜினியர் முதல் சென்னை கமிஷனர் வரை! யார் இந்த அருண் ஐ.பி.எஸ்.?
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
வால்பாறை சுற்றுலா செல்ல பாஸ்ட் டேக் வசதி அறிமுகம் ; இனி சோதனை சாவடியில் காத்திருக்க வேண்டியதில்லை
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
கோவையில் சோகம்; தண்ணீர் தொட்டியில் தாய், மகள்கள் சடலமாக மீட்பு
Embed widget