மேலும் அறிய

Crime : குடும்ப சண்டை.. ஜன்னல் கண்ணாடிகள்.. மகளை கொடூரமாக கொன்ற தந்தை.. நடந்தது என்ன?

குடும்ப சண்டையின்போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் குடும்பசண்டையின் போது, 18 வயது பெண் தனது தந்தையால் தாக்கப்பட்டதால் வியாழக்கிழமை இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில், பெண்ணின் தாய் மற்றும் இரண்டு சகோதரிகளும் காயமடைந்துள்ளனர்.

ஆனால், அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் தெரிவிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை இன்னும் கைது செய்யப்படவில்லை. தாய் மற்றும் அவரது மூன்று மகள்களும் உறவினர் ஒருவரால் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகரில் வசிக்கும் பீம்சென் (45) என்பவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜன்னல் கண்ணாடியால் அவரை தாக்கியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். சண்டையில் தலையிட்டபோது அவர் தனது மகள்களைத் தாக்கி உள்ளார்.

இதனால், மகள் ஒருவரின் வயிற்றில் காயம் ஏற்பட்டது. மகளின் மார்பு மற்றும் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவத்தையடுத்து தந்தை அங்கிருந்து தப்பியோடி உள்ளார். காயமடைந்தவர்கள், உறவினர் ஒருவரின் உதவியை பெற்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

"சிகிச்சையின் போது இளைய மகள் மரணம் அடைந்தார். மற்றொரு மகள் இன்னும் சிகிச்சையில் உள்ளார். மூன்றாவது மகள் மற்றும் அவர்களின் 42 வயதான தாயார் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்" என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரின் இளைய சகோதரர் ரோஷன் லால் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு வேலை எதுவும் இல்லை என்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து விரிவாக விவரித்த அவர், "கொரோனா தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட பொது முடக்கத்திற்கு முன்பு, எனது சகோதரர் ஆட்டோ ரிக்சாவை ஓட்டி வந்தார். ஊரடங்குக்கு பிறகு, அவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் காய்கறிகளை விற்று வந்தார்.

ஆனால், மூத்த மகளுக்கு வங்கியில் வேலை கிடைத்ததும், அவர் வேலையை விட்டுவிட்டு எதுவும் செய்யாமல் இருந்தார். குடிப்பழக்கத்துக்காக கணவனும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டிருக்காங்க. ஆனா இதுக்கு முன்னாடி இப்படி எதுவும் நடந்ததில்லை" என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
‘புது நோய் வருது... மொட்டை அடிச்சா பணம் தருவோம்’ - மர்ம போன் காலை நம்பி ஏமாந்த பெண்கள்!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
போக்குவரத்து விதிமீறல்; ஒரே மாதத்தில் 3000 வழக்குகள், 45 லட்சம் ரூபாய் அபராதம்.. காரைக்கால் போலீசார் அதிரடி நடவடிக்கை..!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
சாந்தங்குடி காதலர்கள் தற்கொலை பின்னணி என்ன? பொய்யான பிரச்சாரங்களுக்கு எதிராகக் களமிறங்கிய சிபிஎம்!
Crime News: 5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்
5 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த ஆசிரியை - காரணம் என்ன? கொதித்து எழுந்த பெற்றோர்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget