மேலும் அறிய

Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!

இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் உரிய நெறிமுறைகள் பின்பற்றபடும் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி பேட்டி.

விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் 2ஆவது நாளாக நடைபெற்ற தடயவியல் நிபுணர் குழுவினர் சோதனையில் கட்டு கட்டாக எரிந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் மீட்பு.
 
உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து  கடந்த 14ஆம் தேதி 63 பயணிகளுடன் தென்னந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவிற்காக புறப்பட்ட ரயில் பெட்டியானது மதுரையில் நேற்று காலை ரயில்வே நிலையம் அருகே போடிலைன் யார்ட் பகுதியில் நின்று கொண்டிருந்தது.  அப்போது ரயிலில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட முயன்றபோது சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி 9 பேர்கள் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர் மேலும் 8 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தனர்.
 
இந்த நிலையில் தீ விபத்து தொடர்பாக இன்று காலை இரண்டாவது நாளாக ரயில்வே காவல்துறை தடவியல் நிபுணர்கள் குழுவினர் நேரில் சென்று ரயில் பெட்டியில் சோதனை நடத்தினர். அப்போது விபத்திற்கு காரணமான கூறப்படும் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டரின் பாகங்கள் கேஸ் அடுப்பின் பாகங்கள் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர் மேலும் விபத்துக்குள்ளாகிய ரயில் பெட்டியில் இருக்கை பகுதிகளிலும், மேற்கூரைகளிலும் சோதனை நடத்திய போது இருக்கை பகுதியில் பயணி கொண்டு வந்திருந்த பெட்டிகளில் இருந்து கட்டு கட்டாக எரிந்த நிலையில் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றினர். இதனிடையே ரயில்பெட்டி தீ விபத்து தொடர்பாக தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் இன்று காலை விசாரணை நடத்தினார். 

Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!
 
இதனை தொடர்ந்து நேற்று ரயில்பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது  தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் பிடித்து வந்த நிலையில் 2 சமையல் ஊழியர்களிடம் தனித்தனியாக பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தினார். முன்னதாக  சிகிச்சையில் இருந்த 7 பயணிகளிடம் பாதுகாப்பு ஆணையர் விசாரணை முடித்த நிலையில் 7 பேரும் விமான நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர். மேலும். அவர்களோடு சேர்த்து 28 பேர் மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து லக்னோ விற்கு புறப்பட்டு சென்றனர்.

Madurai Train Fire Accident: மதுரை ரயில் தீ விபத்தின்போது தப்பியோடிய 2 சமையல் ஊழியர்கள்.. பாதுகாப்பு ஆணையர் நேரில் விசாரணை!
 
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு ஆணையர் டி.எம்.சௌத்ரி
பேசியபோது..,”மதுரை ரயில் பெட்டி  தீ விபத்து குறித்து உரிய  விசாரணை நடைபெற்று வருகிறது 
விசாரணை முடிவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள்  மீது என்ன மாதிரியான  நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரிய வரும் 
சம்பவம் தொடர்பாக கைது  குறித்த கேள்விக்கு அது தொடர்பாக காவல்துறையினர் தான் முடிவு செய்வார்கள் 
விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்துள்ளோம். சுற்றுலா ரெயில் பெட்டிகள்  பயணிகள் ரெயில் பெட்டியில் இனி வரும் காலங்களில்  இதுபோல் விபத்து நடைபெறதா வண்ணம்,  உரிய விதிமுறைகளை கடுமையாக வகுக்கப்படும், இந்த விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதி எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
என்றார்”.
 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறை கஞ்சா வேட்டை: பிடிபட்டது 50 கிலோதானா? காவல்துறை கணக்கில் முறைகேடா?
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget