மேலும் அறிய

Cyber crime: ஆன்லைன் Tradingல் அதிக லாபம்; ரூ.36 லட்சத்தை இழந்த வியாபாரி; சைபர் மோசடியில் சிக்கிய புதுச்சேரி

புதுச்சேரியில் போலி பங்குச்சந்தை இணையலிங்க் மூலம் வியாபாரியிடம் ரூ. 36 லட்சம் மோசடி.

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி பங்குச்சந்தை இணையலிங்க் மூலம் வியாபாரியிடம் ரூ. 36 லட்சம் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குமாரவேல்; வியாபாரி. இவரை ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் மர்ம கும்பல் இணைத்தனர். அந்த குழுவில் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கும் வழிகள் குறித்து வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

திடீரென மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் குமாரவேலுவை தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையாக, பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய குமார வேல் மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் பணம் செலுத்தி முதலீடு செய்யும் பணியை துவக்கினார். பல தவணைகளாக ரூ. 36.45 லட்சம் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ததில் ரூ. 4 கோடி லாபம் ஈட்டியதுபோல் காட்டியது.

பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சித்த போது மேலும் பணம் செலுத்த வேண்டும் என, மர்ம நபர் கூறினார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதுபோல், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த சத்யநாராயணனை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் மொபைல் போன் குற்ற வழக்கில் தொடர்பில் உள்ளது. வழக்கில் இருந்து மொபைல் போனை நீக்க வேண்டும் என கூறி, 24 ஆயிரம் ரூபாய் பெற்று ஏமாற்றி உள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த எழிலரசு கடன் செயலி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்தியும், கூடுதலாக பணம் கேட்டு எழிலரசுவின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி மர்ம நபர் மிரட்டி உள்ளார். இதனால் 12,600 ரூபாயை மர்ம நபருக்கு அனுப்பிய பின்னரும், தொடர்ந்து மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித் தார்.

இதுபோல் நேற்று முன்தினம் மட்டும் குமாரவேல் உட்பட நபர்களிடம் 36.83 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளது குறித்து, சைபர் கிரைம் போலீஸ் விசாரித்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் மூலமாக மோசடி கும்பல், 64.2 கோடி ரூபாயை பொது மக்களை ஏமாற்றி அபகரித்துள்ளனர். இதில், பெண்களுக்கு எதிராக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 12 வழக்குகளில், குற்றவாளிகளை கைது செய்து, 11 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.

மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரை 1930 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு
TVK Maanadu Madurai | ட்ரோன் மூலம் மருந்துகள் TVK மாநாட்டில் புது ஐடியா அசந்து போன தொண்டர்கள்! Vijay
BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Election Commission: பாஜகவை போன்று பதில் அளித்த தேர்தல் ஆணையம் - ”அம்மா, பொண்ணோட வீடியோ கொடுக்கணுமா”
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Vice President Election: குடியரசு துணைத்தலைவர் தேர்தல்... தமிழகத்தின் சி.பி. ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு
Zelensky Vs Trump: உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
உஷார் தான்.! ட்ரம்ப்பை சந்திக்க துணையுடன் வரும் ஜெலன்ஸ்கி; போன தடவை மாதிரி ஆகிடக் கூடாதுல்ல.?!
Donald Trump: இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
இந்தியா என்ன ஊறுகாயா.? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுபடியும் என்ன சொல்லி வச்சுருக்கார் பாருங்க
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
மன்னிக்க முடியாத செயல்.. அன்புமணிக்கு எதிராக பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை - இத்தனை குற்றச்சாட்டா?
EC Slams Rahul: “பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“ - ராகுலை சாடிய தேர்தல் ஆணையம்
“பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் பொய்கள் பரப்பப்படுகின்றன“ - ராகுலை சாடிய தேர்தல் ஆணையம்
Rahul Launch Yatra: “பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விட மாட்டேன்“ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் சூளுரை
“பீகார் தேர்தலில் வாக்குகளை திருட விட மாட்டேன்“ - வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல் சூளுரை
அன்புமணி பதவி பறிப்பு.. பாமக தலைவர் ஆனார் ராமதாஸ்!
அன்புமணி பதவி பறிப்பு.. பாமக தலைவர் ஆனார் ராமதாஸ்!
Embed widget