மேலும் அறிய

திட்டக்குடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 19 சவரன் நகை மற்றும் 6 லட்சம் கொள்ளை

கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆளுநர் கூப்பர் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்கு உள்ள மெயின் ரோடு வரை ஓடி நின்றது

திட்டக்குடி அருகே உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் செந்தில் (46). அரசு ஒப்பந்ததாரர் ஆன இவர் ஊராட்சி ஒன்றியங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு செந்தில் அவரது வீட்டின் முன்றம் உள்ள ஹாலில் குடும்பத்துடன் படுத்து தூங்கினார். பின்னர் நேற்று காலையில் செந்தில் மனைவி ராஜேஸ்வரி (40) எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவுகள், படுக்கை அறையின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


திட்டக்குடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 19 சவரன் நகை மற்றும் 6 லட்சம் கொள்ளை

பின்னர் அவர், படுக்கை அறைக்குள் சென்று பார்த்த போது பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணி மணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 19 பவுன் நகைகளை காணவில்லை.  செந்தில் அவரது குடும்பத்துடன் வீட்டின் முன் பக்க ஹாலில் படுத்து தூங்கியதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இது மட்டும் இன்றி கொள்ளை போன நகைகளின்  மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 


திட்டக்குடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 19 சவரன் நகை மற்றும் 6 லட்சம் கொள்ளை

இது குறித்து ஆவினங்குடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டது. கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் கூப்பர்  கொள்ளை நடந்த வீட்டில் இருந்து அங்கு உள்ள மெயின் ரோடு வரை ஓடி நின்றது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


திட்டக்குடி அருகே அரசு ஊழியர் வீட்டில் 19 சவரன் நகை மற்றும் 6 லட்சம் கொள்ளை

இந்த நிலையில் திட்டக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன, கடந்த சில நாட்களுக்கு முன்னர் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்த நபர் மீது 10 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு நபர் தீவிர காயங்கள் உடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இந்த சூழலில் அரசு ஊழியர் வீட்டிலேயே நடைபெற்று உள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை ஒத்திவைப்பு! எப்போது தெரியுமா?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
Bakrid 2024: பக்ரீத் கொண்டாட்டம்! தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கில் ஆடுகள் விற்பனை - வியாபாரிகள் மகிழ்ச்சி
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
Embed widget