மேலும் அறிய

Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

பீகாரில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தையில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ்(42). இவர் டிசம்பர் 3-ஆம் தேதி வழக்கம் போல் காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். பரபரப்பாக இருக்கும் சந்தையில், ஒருவர் காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை கொடூரமாக வெட்டியுள்ளார். பின்பு, அவரின் தலை, முதுகு, மார்பகம், கை, கால் மற்றும் காதுகளை வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், வலியில் துடித்துக் கொண்டிருந்த நீலம் யாதவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பெண்ணை வெட்டியது முகமது ஷகீல் என்பது தெரியவந்தது.


Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

ஆத்திரத்தில் கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ”நீலம் யாதவின் கணவரும் முகமது ஷகீலும் நண்பர்களாக இருந்தனர். ஷகீலின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டிற்கு வரக்கூடாது என்று, அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், தனது நண்பரின் மனைவி நீலம் யாதவை கடந்த சனிக்கிழமை கொன்றுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

அந்த பெண்ணை வெட்டிய முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, "முகமது ஷகீல் எங்களோட வீட்டிற்கு அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார். இதனால் ஷகீல் தங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக வைத்திருந்தார். தனது மனைவியுடன் ஷகீல்  தவறான எண்ணத்தில் பழகி வந்ததை நான் அறிந்தேன். அதனால் ஷகீலை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், எனது மனைவியை கொலை செய்திருக்கலாம்” என அசோக் யாதவ் கூறியுள்ளார். 

தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பாகல்பூர் போலீசார், முகமது ஷகீலின்  சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னதாக, தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் ஆப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், அவரது உடல் பாகங்களை 35  துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்.

தலைப்பு செய்திகள்

133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
133 வழக்குகள்... ஒரே நாளில் சாம்பலான ரூ.1 கோடி போதைப்பொருள்! பின்னணி என்ன?
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
US Iran War: பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
பின்னி பெடலெடுக்கும் ஈரான்! அமெரிக்க போர் விமானங்கள், ஜோர்டான் விமானப்படை தளம் அழிப்பு என அறிவிப்பு
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Monsoon season: பாதுகாப்பு முக்கியம் பாஸு; மழைக்கால கார் பயணம்- சேஃப்டிக்கு என்னென்ன தேவை?
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
Free Claude AI: ஆசிரியர்களுக்கு இலவச ஏஐ சேவை அறிமுகம்- யாரெல்லாம் பெறலாம்? முழு விவரம்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Chennai Power Cut: சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 18-ம் தேதி எங்கெங்க மின்சாரத் தடை பண்ணப் போறாங்க தெரியுமா.? ’ஏரியா லிஸ்ட் இதோ
Embed widget