மேலும் அறிய

Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

பீகாரில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தையில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ்(42). இவர் டிசம்பர் 3-ஆம் தேதி வழக்கம் போல் காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். பரபரப்பாக இருக்கும் சந்தையில், ஒருவர் காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை கொடூரமாக வெட்டியுள்ளார். பின்பு, அவரின் தலை, முதுகு, மார்பகம், கை, கால் மற்றும் காதுகளை வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், வலியில் துடித்துக் கொண்டிருந்த நீலம் யாதவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பெண்ணை வெட்டியது முகமது ஷகீல் என்பது தெரியவந்தது.


Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

ஆத்திரத்தில் கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ”நீலம் யாதவின் கணவரும் முகமது ஷகீலும் நண்பர்களாக இருந்தனர். ஷகீலின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டிற்கு வரக்கூடாது என்று, அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், தனது நண்பரின் மனைவி நீலம் யாதவை கடந்த சனிக்கிழமை கொன்றுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

அந்த பெண்ணை வெட்டிய முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, "முகமது ஷகீல் எங்களோட வீட்டிற்கு அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார். இதனால் ஷகீல் தங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக வைத்திருந்தார். தனது மனைவியுடன் ஷகீல்  தவறான எண்ணத்தில் பழகி வந்ததை நான் அறிந்தேன். அதனால் ஷகீலை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், எனது மனைவியை கொலை செய்திருக்கலாம்” என அசோக் யாதவ் கூறியுள்ளார். 

தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பாகல்பூர் போலீசார், முகமது ஷகீலின்  சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னதாக, தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் ஆப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், அவரது உடல் பாகங்களை 35  துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget