மேலும் அறிய

Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

பீகாரில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தையில் 42 வயதான பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ்(42). இவர் டிசம்பர் 3-ஆம் தேதி வழக்கம் போல் காய்கறி சந்தைக்கு சென்றுள்ளார். பரபரப்பாக இருக்கும் சந்தையில், ஒருவர் காய்கறி விற்பனை செய்வதுபோல் நடித்து, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை கொடூரமாக வெட்டியுள்ளார். பின்பு, அவரின் தலை, முதுகு, மார்பகம், கை, கால் மற்றும் காதுகளை வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், வலியில் துடித்துக் கொண்டிருந்த நீலம் யாதவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரின் கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த பெண்ணை வெட்டியது முகமது ஷகீல் என்பது தெரியவந்தது.


Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

ஆத்திரத்தில் கொலை

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது, ”நீலம் யாதவின் கணவரும் முகமது ஷகீலும் நண்பர்களாக இருந்தனர். ஷகீலின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை வீட்டிற்கு வரக்கூடாது என்று, அந்த பெண்ணின் கணவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், தனது நண்பரின் மனைவி நீலம் யாதவை கடந்த சனிக்கிழமை கொன்றுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

அந்த பெண்ணை வெட்டிய முகமது ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து, உயிரிழந்த பெண்ணின் கணவர் கூறியதாவது, "முகமது ஷகீல் எங்களோட வீட்டிற்கு அருகில் தான் விவசாயம் செய்து வருகிறார். இதனால் ஷகீல் தங்களது வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக வைத்திருந்தார். தனது மனைவியுடன் ஷகீல்  தவறான எண்ணத்தில் பழகி வந்ததை நான் அறிந்தேன். அதனால் ஷகீலை வீட்டிற்கு வர வேண்டாம் என்று கூறியிருந்தேன். இதனால் ஆத்திரமடைந்த ஷகீல், எனது மனைவியை கொலை செய்திருக்கலாம்” என அசோக் யாதவ் கூறியுள்ளார். 

தனிப்படைகள் அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக பாகல்பூர் போலீசார், முகமது ஷகீலின்  சகோதரர் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஷகீலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பாக, டெல்லியில் நடந்த கொடூர கொலை சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

முன்னதாக, தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் ஆப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர், அவரது உடல் பாகங்களை 35  துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget