மேலும் அறிய

Crime: மூதாட்டிகளே உஷார்... தேடி தேடி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ராட்சசன்...!

உத்தர பிரதேசத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்யும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடரும் வன்முறைகள்

உத்தர பிரதேச மாநிலத்தில் மூதாட்டிகளை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவங்கள் அரகேறி வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் மூதாட்டிகள் மூன்று பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது.

அதனால் உத்தர பிரதேச போலீசார் குற்றவாளியை பிடிக்க தீவிர  நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஆறு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். அந்த குற்றவாளியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு, இவரை பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கவும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்படைகள் அமைப்பு

இதுவரை உத்தர பிரதேசத்தில் பாராபங்கி மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தவரை நீக்கி, புதிதாக வேறொரு அதிகாரியை பாராபங்கி மாவட்ட எஸ்.பி. நியமித்து உத்தரிவிட்டிருந்தார். அதன்படி, போலீசார் குற்றாவாளியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பவர் 5ஆம் தேதி அயோத்தியா மாவட்டத்தில் குஷெட்டி கிராமத்தல் மாவாய் பகுதியைச்  சேர்நத 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் தனது வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மூதாட்டி வீட்டிற்கு வரவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அயோத்தியா மாவட்டத்தில் கால்வாயில் ஓரமாக மூதாட்டியின் உடல் கிடந்துள்ளது.  நிர்வாண நிலையில் கிடந்த அந்த உடலில் தலை, முகம், கால் ஆகிய பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று கடந்த வாரம் பாராபங்கி மாவட்டத்தில் 62 வயதான மூதாட்டியின் உடல் கிடப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. மற்றொரு சம்பவம் டிசம்பர் 30ஆம் தேதி 55 வயதுடைய மூதாட்டி இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இதனால் போலீசார் இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய குற்றவாளியை தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகரிக்கும் குற்றங்கள்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு  சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876  புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன.  மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில்  1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget