மேலும் அறிய

Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை தொடர்பாக 3 நபர்களை கைது செய்து 19 பவுன் தங்க நகை, 100 கிராம் வெள்ளி, இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த பறையம்பட்டு சாலையை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 47) முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது வாழவச்சனூர் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி காலை பணிக்குச் சென்றுவிட்டார். பூமிநாதன் மனைவி செல்வி (வயது 40) வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து மர்மநபர்கள் வீட்டில் இருந்த நகை, பணம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுகுறித்து வாணாபுரம் காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க ஆய்வாளர்  செல்வநாயகம் தலைமையில் தனிப்படை காவல்துறையினர்  விசாரணையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து  கொள்ளையடிக்கப்பட்ட வீட்டின் கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்


Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

 

செய்யாறு அருகே உள்ள மோரணம் காவல் நிலையத்தில் கொள்ளையில் ஈடுபட்ட கைரேகையும் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவரின் கைரேகையும் ஒத்து போனதையடுத்து அவர்களின் புகைப்படத்தை வைத்து காவல்துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை சாலையில் ஆய்வாளர்  செல்வநாயகம் துணை ஆய்வாளர்  பிரசாந்த், சரவணன் , அம்பிகா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர்  விசாரணை செய்ததில் திருவண்ணாமலை பகுதியில்லிருந்து இருசக்கர வாகனத்தில்  வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை  காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர்கள் வேலூர் சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சசி என்கிற சசிகுமார் (வயது 46) மற்றும் சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்க மகன் மாட்டு ரமேஷ் (வயது 55)

 


Crime: தண்டராம்பட்டு அருகே முன்னாள் ராணுவர் வீட்டில் கொள்ளை; வேலூர், சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

 

திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் பாஸ்கரன் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் முன்னாள் ராணுவ வீரரின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர்  அவர்களிடமிருந்து 19 பவுன் தங்க நகை 100 கிராம் வெள்ளி ஒரு இரண்டு சக்கர வாகனம்  இரும்பு ராடு உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சசிகுமார், மாட்டு ரமேஷ், பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் மீது சென்னை, பூந்தமல்லி, திருவண்ணாமலை உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பதும் இதில் சசிகுமார் மீது 13 வழக்குகளும் மாட்டு ரமேஷ் மீது 40 வழக்குகளும் பாஸ்கரன் மீது 3 வழக்குகளும் உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காதலித்து கர்ப்பம்
காதலித்து கர்ப்பம் " குழந்தையை தூக்கி போட்டு வா " குழந்தைக்கு நேர்ந்த சோகம்
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
மனிதர்களை கொல்வது இலக்கல்ல.. .பொருட்சேதமே டார்க்கெட் - சிக்கிய குண்டு மிரட்டல் கடிதம்....
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
வீடு புகுந்த திருடன் தப்பி ஓட்டம்... பேரூரில் நள்ளிரவு பரபரப்பு...
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்
விஜய்க்கு காவல்துறை செக்வீட்டில் இருந்தே பரப்புரை?கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
IPL 2026 LSG vs DC: சாமியாய் மாறிய சமீர் ரிஸ்வி..! தோற்க வேண்டிய டெல்லி சூப்பர் வெற்றி! பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம்
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
காண்டம் தட்டுப்பாடு! ஈரானால் புதிய நெருக்கடியில் இந்தியா!8000 கோடி நட்டம்!
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Car Sales: மாஸ் காட்டிய மாருதி! மார்ச் மாசம் அதிகம் விற்ற கார் யாரோடது?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
MK Stalin: கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
கரூரில் செந்தில் பாலாஜி ஏன் போட்டியிடவில்லை? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன காரணம்?
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TN Election 2026: வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 2 நாள்தான்; வேட்பாளரையே தேர்வு செய்யாத பாஜக, காங்கிரஸ்- இதான் காரணம்!
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
TVK Vijay: தமிழ்நாட்டின் மாற்றுத் தலைவராக உருவெடுக்கும் விஜய்! கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
Embed widget