மேலும் அறிய

crime: மிரட்டல் விடுத்த இளைஞர்..! விஷம் குடித்து தற்கொலை செய்த 11ம் வகுப்பு மாணவி..! நடந்தது என்ன..?

crime: ஒடிசாவில் இளைஞரின் மிரட்டலுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.

crime: ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று இரவு விஷம் குடித்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிராகர்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கஜூரிபாடாவை பகுதியைச் சேர்ந்த ஷாசாப் சாஹா என்ற இளைஞர் தனது புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர போவதாகவும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், நான் கல்லூரிக்கு செல்லும் போது, தன்மேல் ஆசிட் அடிப்பதாகவும் அந்த இளைஞர் தன்னை மிரட்டியதாக மாணவி புகாரில் உள்ளதாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை செய்த செய்தியை அறிந்த இளைஞர் வெளியூருக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என குர்தா எஸ்பி தெரிவித்துள்ளார்.

ஷாசாப் என்ற இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில் அந்த இளைஞரின்  தந்தை முர்தாசா சாஹா (55), தாய் பேகம் பீபி (45), சகோதரர் அர்ஷாத், சகோதரிகள் அப்சானா, அஸ்மா பேகம் மற்றும்  உறவினர் ரிஹானா பீபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுமியின் தவறான புகைப்படங்கள் அந்த இளைஞரிடம் இருக்கிறதா? இல்லையா?  என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் குர்தா எஸ்பி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று நேற்று புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, தகவல் அறிந்து வந்த தவளகுப்பம் போலீசார் மாணவி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நேற்று காலை தனது  அக்கா உடன் ஸ்ரீமதி சண்டையிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது தாய் மாணவியை கண்டித்துள்ளார், இதில் ஸ்ரீமதி காலை முதலே பள்ளியில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்த நிலையில், மதியம் உணவு நேரத்தில் நெயில் பாலிஷ் அருந்தி தற்கொலை  முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget