மேலும் அறிய

Crime: மகளுக்காக 13 வயது சிறுவனை கொன்ற தாய் - ஜுஸில் எலி பேஸ்ட், பள்ளி வாட்ச்மேன் மூலம் ஸ்கெட்ச்...

Crime: மகளை விட நன்றாக படித்ததற்காக 13 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு, காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Crime: காரைக்காலில் 13 வயது சிறுவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

13 வயது சிறுவனை கொன்ற பெண்

காரைக்காலில் பள்ளியில் தனது மகளை காட்டிலும் நன்றாக படித்து, முதல் மதிப்பெண் எடுத்த மாணவனை விஷம் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.  மாணவர்கள் இடையே நிலவிய ஆரோக்கியமான போட்டிக்காக, 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுவனை கொலை செய்த பெண்ணுக்கு, தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாந்தி எடுத்து மயங்கி விழுந்த சிறுவன்:

காரைக்​காலில் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பில் வசித்து வரும் ராஜேந்​திரன்​- மால​தி தம்பதியின் மகண் தான் பாலமணி​கண்​டன்​.  அதே பகுதியில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​த சிறுவன், படிப்​பு மட்டுமின்றி விளை​யாட்​டு மற்றும் கலை நிகழ்ச்​சிகள் போன்றவற்றிலும் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதியன்று நடை​பெற்ற பள்ளி ஆண்டு விழாவிற்கான ஒத்​தி​கை​யில் பங்​கேற்​று​விட்டு வீடு திரும்​பிய பாலமணி​கண்​ட​ன் வாந்​தி எடுத்தபடி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் விஷம் அருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குளிர்பானத்தில் விஷம்..

இதையடுத்து கடைசியாக என்ன சாப்பிட்டாய் என சிறுவனிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, நீங்கள் கொடுத்து அனுப்பியதாக பள்ளி காவலாளியான தேவதாஸ் அளித்த குளிர்பானத்தை அருந்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால், தாங்கள் அப்படி ஏதும் கொடுத்து அனுப்பவில்லையே என சந்தேகம் ஏற்பட்டு உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், காரைக்​காலைச் சேர்ந்த சகாய​ராணி விக்​டோரி​யா(46), பால மணி​கண்​டனின் பெற்றோர் கொடுத்​த​தாகக் கூறி, பள்​ளிக் காவலாளி தேவ​தாஸிடம் குளிர்​பானம் கொடுத்தது தெரிய​வந்​தது. அதில் கலக்கப்பட்டு இருந்த விஷம் காரணமாக, மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 3-ம் தேதி இரவு பாலமணி​கண்​டன் உயி​ரிழந்​தார்.

கொலைக்கான காரணம் என்ன?

இதனிடையே, சகாய​ராணியை கைது செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது,  பாலமணி​கண்​ட​னுக்​கும், அவரது வகுப்பில் பயின்று வந்த சக மாணவி ஒருவருக்​கும் படிப்பில் போட்டி இருந்​ததுள்ளது. தனது மகளை விட நன்கு படித்து முதல் மதிப்பெண் பெற்றதோடு, விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியிலும் சிறந்து விளங்கியதால் சகாய ராணிக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி ஆண்டு விழா கலை நிகழ்​சி​யில் பாலமணி​கண்​டனை பங்​கேற்​க​விடா​மல் தடுக்​கும் நோக்​கில் விஷம் கலந்த குளிர்​பானத்தை, பெற்றோரின் பேரில் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

ஆயுள் தண்டனை விதிப்பு:

மாணவன் கொலை தொடர்​பான வழக்கு காரைக்​கால் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் கடந்த 3 ஆண்டுகளாக நடை​பெற்​று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில், வழக்கை விசா​ரித்த நீதிபதி ஆர்​.மோகன், குற்​றம்​சாட்​டப்​பட்ட சகாய​ராணி விக்​டோரி​யா​வுக்கு ஆயுள் தண்​டனை​யும், ரூ.20 ஆயிரம் அபராத​மும் விதித்து தீர்ப்​பளித்​தார். முன்னதாக, சகாய ராணிக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற அரசு தரப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, அந்த அளவுக்கு இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Salem: ஆத்தாடி.. என் மேல சந்தேகப்படுறீயா?.. கணவனை தீவைத்து கொன்ற மனைவி!
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
Kanimozhi: பூசி மொழுகிய கனிமொழி.. உங்க தொகுதினா மட்டும் வலிக்குதா? அண்ணனுக்கு ஆதரவா? - நெட்டிசன்கள் ஆவேசம்
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
தூத்துக்குடி: 12ம் வகுப்பு மாணவி கொடூர கொலை! குற்றவாளிகளை கைது செய்ய போராட்டம், பதற்றம்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget