மேலும் அறிய

Crime: மிஸ்டு கால் மூலம் தவறான உறவு.... குடும்பத்தை உதறிவிட்டு வந்த பெண் கொலை...கள்ளக்காதலன் கைது

திருவண்ணாமலை அருகே மிஸ்டு கால் மூலம் கள்ளக்காதல். கணவர், மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் வயது (36). இவர் லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கும், சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் மனைவி நதியா வயது (32) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்கராஜுன் செல்போனில் இருந்து தவறுதலாக சென்ற அழைப்பின் மூலம் அவருக்கும், நதியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நதியாவுக்கும் தங்கராஜுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக செல்போனில் பேசியும் பழகியும் வந்துள்ளனர். தங்கராஜ் வேலைக்காக சென்னைக்கு செல்லும் போது நதியாவை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. நதியாவின் கள்ளக்காதலை அறிந்த பார்த்தசாரதி அதனை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

 


Crime: மிஸ்டு கால் மூலம் தவறான உறவு.... குடும்பத்தை உதறிவிட்டு வந்த பெண் கொலை...கள்ளக்காதலன் கைது

 

இதனால் ஆத்திரம் அடைந்த நதியா அவரது கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு கடந்த மாதம் 24ம் தேதி அன்று கண்ணக்குருக்கை கிராமத்தில் உள்ள தங்கராஜுயின் வீட்டிற்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்து அருகில் உள்ள ஒரு வீட்டில் நதியாவை தங்கராஜ் தங்க வைத்தார். இதை கேள்விப்பட்ட ரேகா இது பற்றி தங்கராஜுயிடம் கேட்டார். அப்போது நீங்கள் இரண்டு பேரும் என்னுடன் ஒன்றாக வாழ வேண்டும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நதியாவின் குழந்தைகளை அழைத்துச் சென்று சென்னை மாங்காட்டில் உள்ள அவரது கணவர் வீட்டில் விட்டு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு நதியாவை அழைத்துச் சென்றார். அப்போது அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் ரேகா தகராறில் ஈடுபட்டார். இதனால் நதியாவுடன் தங்கராஜ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து அப்பகுதியில் உள்ள உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக தங்கராஜ் கூறியுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உயர்மின் கோபுரம் மீது இருந்த தங்கராஜுயிடம் இறங்கி வரும்படி கூறினார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததோடு திடீரென கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தரப்பினார் அவரை காவல்துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் தங்கராஜ் இடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தங்கராஜ் தன் வீட்டுக்கு நதியாவை அழைத்துச் சென்று மனைவியிடம் இரண்டு பேரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கூறியதாகும் அதற்கு நதியா தங்கராஜுயிடம், ‘நான் இனிமேல் உன்னோடு தான் வாழ்வேன்’ என்று கூறியுள்ளார். இதை கேட்டு தங்கராஜுயின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தங்கராஜ் மற்றும் நதியாவிடம் தகராறு செய்து உள்ளார். மேலும் வேதனை அடைந்த நதியா தற்கொலை செய்து கொள்வதாக அங்கிருந்து சென்றார்.  

 


Crime: மிஸ்டு கால் மூலம் தவறான உறவு.... குடும்பத்தை உதறிவிட்டு வந்த பெண் கொலை...கள்ளக்காதலன் கைது

பின்னர் தங்கராஜ் அவரை சமாதானம் செய்ய பெரியகோளாப்பாடி மலை குன்று பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது தங்கராஜுக்கும், நதியாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராஜ், நதியாவை அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நதியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய தங்கராஜை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவன், மகன்களை உதறிவிட்டு திருவண்ணாமலைக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
India vs Pakistan: லாகூரில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி? - பாகிஸ்தானின் முடிவுக்கு ஓகே சொல்லுமா பிசிசிஐ!
Maharaja Box Office: பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த விஜய் சேதுபதியின் 'மகாராஜா'.. 100 கோடி வசூலை தாண்டியது!
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Shalini Ajith : ஷாலினிக்கு ஆபரேஷன்... அஜர்பைஜானில் இருந்து விரைந்து வந்த அஜித்... என்ன விஷயம்?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
Kalki 2898 AD 6th day collection: 6ம் நாளில் வசூலில் கலக்கிய கல்கி 2898 AD படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரிலீஸ் தெரியுமா?
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா.. திமுக தந்த அதிர்ச்சி.. பரபர பின்னணி!
Embed widget