மேலும் அறிய

Crime: பெண் மேலாளர் கத்தியால் குத்திக்கொலை; சக மேலாளர் லாரியில் பாய்ந்து தற்கொலை - திண்டிவனம் அருகே கொடூரம்

புதுச்சேரி பைபாஸ் சாலையில் பெண் வங்கி மேலாளரை கத்தியால் குத்தி கொலை செய்த சக வங்கி மேலாளர் மற்றொரு வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே பயங்கரம் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில் தனியார் வங்கி பெண் மேலாளரை கத்தியால் குத்தி கொலை  செய்த சக வங்கி மேலாளர் மற்றொரு வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு உடல்களையும் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் கொலை

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த கீழ் கூத்தப்பாக்கம் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை சாலை ஓரத்தில் விபத்தில் இறந்து கிடந்தார். இவர் உடல் கிடந்த குறிப்பிட்ட தொலைவில் கார் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டகுப்பம் துணை காவல் கண்காணிப்பாளர்  சுனில் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது விபத்தில் அடிபட்டு சாலை ஓரத்தில் இறந்து கிடந்தவர் சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கோபிநாத் வயது 37 என்பதும்,  இவர் மரக்காணம் கரூர் வைசியா வங்கியில் மேலாளராக பணியாற்றியதும் தெரியவந்தது .

காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்

காரில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த நெய்வேலி வடக்குத்து இந்திரா நகரை சேர்ந்த பாண்டி என்பவருடைய மனைவி மதுரா பாண்டி (30) என்பது தெரிய வந்தது மதுரா பாண்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள கரூர் வைசியா வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் வங்கியில் பணி புரிந்த போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் திருமணம் ஆகி குடும்பத்தோடு தனித்தனியே புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கோபிநாத் மதுரா பாண்டி சிறுவரும் ஒரே காரில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மதுரா பாண்டியை, இசை பேனா கத்தியால் கோபிநாத் கொலை செய்து காரிலேயே உடலை வைத்துவிட்டு புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சென்ற வாகனத்தின் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

காரணம் என்ன?

திருமணம் மீறிய உறவு தொடர்பாக இந்த கொலை மற்றும் தற்கொலை நடந்ததா? அல்லது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரது உடலும் புதுச்சேரி காலாப்பட்டு உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் மனைவி சாந்தி ப்ரீத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவை ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். அந்த புகாரில் அளித்த தகவலை வைத்து கொலை மற்றும் தற்கொலை குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டிஐஜி விசாரணை

 மேலும் இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் தடவையில் நிபுணர்கள் ஆகியோர் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
IPL 2025 GT Win Over DC: சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
IPL 2025 GT Win Over DC: சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
IOB Recruitment for LBO: உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
உங்களுக்கு தமிழ் தெரியுமா.? ஐஓபி வங்கியில் அருமையான வாய்ப்பு, தவற விடாதீங்க; முழு விவரம் இதோ
Ajith Race Car Accident: ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
ரேஸில் சிட்டாய் பறந்த அஜித்தின் கார்; திடீரென வெடித்த டயர், பரபரப்பு நொடிகள் - என்ன ஆச்சு.?
Covid Spread in TN: மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
மீண்டும் கொரோனா; தமிழ்நாட்டில் 18 பேருக்கு தொற்று உறுதி; சுகாதாரத்துறை சொல்வது என்ன.?
Embed widget