மேலும் அறிய

Crime : துணி துவைப்பதில் தகராறு.... காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழந்த சோகம்... திமுக கவுன்சிலர் உட்பட 9 பேர் கைது...!

கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் ஏற்பட்ட தகராறில்  ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாதையன். இவருக்கு பிரபாகரன் (33) மற்றும் பிரவு (28) என இருமகன்கள் உள்ளனர். இருவருமே ராணுவத்தில் பணியாற்றி வந்தனர். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி தெருவில் உள்ள பொதுகுழாய் அருகே பிரபாகரன் துணி துவைத்து கொண்டிருந்தார்.

இருதரப்பு மோதல்

அப்போது, அந்த வழியாக வந்த நாஹோகனஹள்ளி பேரூராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (55), "இந்த இடத்தில் துணி துவைக்க கூடாது. இது பொதுக் குழாய் என்று கூறி, பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த பிரபுவிடமும் வாக்குவாதம் செய்தனர். 

இதனால் அங்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து, அன்று இரவே இருதரப்புக்கு  இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அங்கு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி அவருடன் வந்த எட்டு பேரும் பிரபு, பிரபாகரன் அவர்களுக்கு ஆதரவாக வந்த தேவராஜ், மாதையன் ஆகியோரை கடுமையாக தாக்கினர்.

உயிரிழப்பு

இதில் படுகாயமடைந்த நான்கு பேரும் ஓசூர் தனியார் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, அப்பகுதி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திமுக கவுன்சிலர் சின்னசாமி, அவர் உறவினர்களான குருசூரியமூர்த்தி, மணிகண்டன், ராஜபாண்டி, குணாநிதி  உட்பட மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.

துணிதுவைப்பதில் ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்ணாமலை கண்டனம்

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 29 வயதே ஆன ராணுவ வீரர் பிரபு, திமுக பேரூராட்சி கவுன்சிலர் ஒருவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து, அதிர்ச்சியும் கோபமும் அடைந்தேன். 

ராணுவ வீரர்களுக்கு, திமுகவினர் அராஜகத்தால், சொந்த ஊரிலேயே பாதுகாப்பில்லை. தங்கள் உயிரையும் துச்சமென கருதி எல்லையில் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அவர்கள் குடும்பத்தினரை மிரட்டுவதும், அவர்கள் மேல் தாக்குதல் நடத்துவதும், தற்போது கொலையே செய்யும் அளவுக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் உருமாறியுள்ளது” என்றார்.

மேலும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் சட்டம் ஒழுங்கு எப்படி போனால் எனக்கென்ன என்று  இருப்பதை, பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடனடியாக கொலையாளிகள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டுமென” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

"அரசியல் பிரச்சனை எதுவும் இல்லை"

இதனை அடுத்து இவ்விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் பிரச்சனைகள் எதுவும்  இல்லை. சம்பவத்தில் அரசியல் உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், மோதிக்கொண்ட இருதரப்பினரும் நெருங்கிய உறவினர்கள். இதனால் இந்த பிரச்சனையை அரசியல் பிரச்சனையாக பார்க்க வேண்டாம். கொலை வழக்கை அரசியல் கண்ணோட்டதோடு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
The Odyssey Review: ”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
”தி ஒடிஸி” எப்படி இருக்கு? நோலனின் காவியம் தெறிக்கிறதா? சோதிக்கிறதா - திரைப்பட விமர்சனம்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Embed widget