மேலும் அறிய

Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை 06:46 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:34 மணிக்கு நிறைவடையும் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை முதலே திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வர தொடங்கினர், திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த பக்தர்கள் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் அனைவரும் கிரிவலம் வரும் பக்தர்கள் அளிக்கும் யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடிப்படையாகவும் சாக்காகவும் வைத்து கொண்டு, பெற்ற பிள்ளைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுத்து வரும் அவல நிலை தற்போது கிரிவலப் பாதையில் அரங்கேறி உள்ளது.

 


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

ரகசிய தகவல்

சமூக நலத்துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையத்திற்கு பெற்றோர்களே தங்களது குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் இன்று மாலை முதல் காவல் துறையினரின் உதவியுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிரிவலப் பாதையில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சோதனையில் அடிஅடிஅண்ணாமலை, கோசாலை, ராமர்பாதம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களை பிடித்து விசாரித்ததில், தங்களது பெற்றோர்களே தங்களை பிச்சை எடுக்க அழைத்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், மோரணம், காட்டுமலையனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளை அடையாளம் கண்டனர். குறிப்பாக கோயமுத்தூர், திருச்சி, மதுரை, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது.


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

அவர்களிடம் விசாரணை செய்த ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் தங்களது பெற்றோர்களே தங்களை பல்வேறு ஊர்களுக்கு திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும், தற்போது அவர்கள்தான் தங்களை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs AFG LIVE Score T20 WC: 3 விக்கெட் இழப்பு.. நிதான ஆட்டத்தில் இந்திய அணி!
IND vs AFG LIVE Score T20 WC: 3 விக்கெட் இழப்பு.. நிதான ஆட்டத்தில் இந்திய அணி!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs AFG LIVE Score T20 WC: 3 விக்கெட் இழப்பு.. நிதான ஆட்டத்தில் இந்திய அணி!
IND vs AFG LIVE Score T20 WC: 3 விக்கெட் இழப்பு.. நிதான ஆட்டத்தில் இந்திய அணி!
Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.. ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு..!
ADMK: இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
இரண்டாவது மிகப்பெரிய கள்ளச் சாராய மரணம் இது.. திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Pro Tem Speaker: மக்களவையின் இடைக்கால சபாநாயகராக மஹ்தப் நியமனம்- குடியரசுத் தலைவர் உத்தரவு
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு..FIR- இல் இருக்கும் பரபரப்பு தகவல் என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
NEET Row : ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தப்ப முடியாது” - கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தது என்ன?
Kallakurichi Liquor Death: கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் நடிகர் விஜய்.. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல்..!
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
சட்டவிரோத மது விற்பனையை எப்படி அனுமதிக்கின்றனர் – உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்வி
Embed widget