மேலும் அறிய

Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை 06:46 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:34 மணிக்கு நிறைவடையும் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை முதலே திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வர தொடங்கினர், திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த பக்தர்கள் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் அனைவரும் கிரிவலம் வரும் பக்தர்கள் அளிக்கும் யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடிப்படையாகவும் சாக்காகவும் வைத்து கொண்டு, பெற்ற பிள்ளைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுத்து வரும் அவல நிலை தற்போது கிரிவலப் பாதையில் அரங்கேறி உள்ளது.

 


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

ரகசிய தகவல்

சமூக நலத்துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையத்திற்கு பெற்றோர்களே தங்களது குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் இன்று மாலை முதல் காவல் துறையினரின் உதவியுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிரிவலப் பாதையில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சோதனையில் அடிஅடிஅண்ணாமலை, கோசாலை, ராமர்பாதம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களை பிடித்து விசாரித்ததில், தங்களது பெற்றோர்களே தங்களை பிச்சை எடுக்க அழைத்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், மோரணம், காட்டுமலையனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளை அடையாளம் கண்டனர். குறிப்பாக கோயமுத்தூர், திருச்சி, மதுரை, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது.


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

அவர்களிடம் விசாரணை செய்த ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் தங்களது பெற்றோர்களே தங்களை பல்வேறு ஊர்களுக்கு திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும், தற்போது அவர்கள்தான் தங்களை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து? மோடி - அமித் ஷா மீட்டிங் இதுக்கு தானா?
JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து? மோடி - அமித் ஷா மீட்டிங் இதுக்கு தானா?
India On Trump: மிரட்டிப் பாக்குறீங்களா? பொறுமையை இழந்த மோடி, ட்ரம்ப் செய்வதை போட்டுடைத்த இந்தியா..
India On Trump: மிரட்டிப் பாக்குறீங்களா? பொறுமையை இழந்த மோடி, ட்ரம்ப் செய்வதை போட்டுடைத்த இந்தியா..
EV Car Sale: இன்ஜின் கார்னா தான் மாருதி, மின்சார எடிஷன்னு வந்துட்டா நாங்க தான் கெத்து - மிரட்டலான விற்பனை
EV Car Sale: இன்ஜின் கார்னா தான் மாருதி, மின்சார எடிஷன்னு வந்துட்டா நாங்க தான் கெத்து - மிரட்டலான விற்பனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
TVK Vijay: 69,400 பூத் ஏஜெண்ட்கள்.. திமுக-வை ஆட்டிப்பார்க்க இவர்கள்தான் அஸ்திரம் - விஜய் ஸ்கெட்ச் கைகொடுக்குமா?
JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து? மோடி - அமித் ஷா மீட்டிங் இதுக்கு தானா?
JK Statehood: ஜம்மு & காஷ்மீருக்கு இன்று மீண்டும் மாநில அந்தஸ்து? மோடி - அமித் ஷா மீட்டிங் இதுக்கு தானா?
India On Trump: மிரட்டிப் பாக்குறீங்களா? பொறுமையை இழந்த மோடி, ட்ரம்ப் செய்வதை போட்டுடைத்த இந்தியா..
India On Trump: மிரட்டிப் பாக்குறீங்களா? பொறுமையை இழந்த மோடி, ட்ரம்ப் செய்வதை போட்டுடைத்த இந்தியா..
EV Car Sale: இன்ஜின் கார்னா தான் மாருதி, மின்சார எடிஷன்னு வந்துட்டா நாங்க தான் கெத்து - மிரட்டலான விற்பனை
EV Car Sale: இன்ஜின் கார்னா தான் மாருதி, மின்சார எடிஷன்னு வந்துட்டா நாங்க தான் கெத்து - மிரட்டலான விற்பனை
உங்கள் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? இது நடக்கலாம்..!
உங்கள் கனவில் பாம்பு வந்தால் நல்லதா? கெட்டதா? இது நடக்கலாம்..!
Siraj: 183 ஓவர்கள்...  சிராஜ் எனும் சிங்கம்.. அசராத வீரனாய் அசத்திய கோலியின் தம்பி..!
Siraj: 183 ஓவர்கள்... சிராஜ் எனும் சிங்கம்.. அசராத வீரனாய் அசத்திய கோலியின் தம்பி..!
Jasprit Bumrah: டெஸ்டில் பும்ரா கதை ஓவர்? வேகமும் இல்லை, ராசியும் இல்லை - ஓரங்கட்ட முடிவெடுத்த பிசிசிஐ?
Jasprit Bumrah: டெஸ்டில் பும்ரா கதை ஓவர்? வேகமும் இல்லை, ராசியும் இல்லை - ஓரங்கட்ட முடிவெடுத்த பிசிசிஐ?
Nilgiris Red Alert: ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ரெட் அலெர்ட் எதிரொலி; நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Embed widget