மேலும் அறிய

Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று மாலை 06:46 மணிக்கு தொடங்கி இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:34 மணிக்கு நிறைவடையும் என அருணாச்சலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை முதலே திருவண்ணாமலைக்கு வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வர தொடங்கினர், திருவண்ணாமலைக்கு வருகை புரிந்த பக்தர்கள் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஏராளமான சாதுக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்கள் அனைவரும் கிரிவலம் வரும் பக்தர்கள் அளிக்கும் யாசகம் எடுத்து வாழ்ந்து வருகின்றனர். இதனை அடிப்படையாகவும் சாக்காகவும் வைத்து கொண்டு, பெற்ற பிள்ளைகளை வைத்து பெற்றோர்களே பிச்சை எடுத்து வரும் அவல நிலை தற்போது கிரிவலப் பாதையில் அரங்கேறி உள்ளது.

 


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

ரகசிய தகவல்

சமூக நலத்துறையின் கீழ் செயல்படக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மையத்திற்கு பெற்றோர்களே தங்களது குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் இன்று மாலை முதல் காவல் துறையினரின் உதவியுடன் பல்வேறு குழுக்களாக பிரிந்து கிரிவலப் பாதையில் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சோதனையில் அடிஅடிஅண்ணாமலை, கோசாலை, ராமர்பாதம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுவர்களை பிடித்து விசாரித்ததில், தங்களது பெற்றோர்களே தங்களை பிச்சை எடுக்க அழைத்து வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், மோரணம், காட்டுமலையனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சிறுவர் மற்றும் சிறுமிகளை அடையாளம் கண்டனர். குறிப்பாக கோயமுத்தூர், திருச்சி, மதுரை, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தது தெரியவந்தது.


Crime: பெற்றோர்களே குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் அவலம்; என்னதான் நடக்கிறது திருவண்ணாமலையில்?

அவர்களிடம் விசாரணை செய்த ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் தங்களது பெற்றோர்களே தங்களை பல்வேறு ஊர்களுக்கு திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளதாகவும், தற்போது அவர்கள்தான் தங்களை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய அதிகாரிகள் அரசு காப்பகத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்று காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர், பெற்றோர்களே தங்களது குழந்தைகளை திருவிழா காலங்களில் அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
Embed widget