மேலும் அறிய

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூர தந்தை - போலீசிடம் சிக்கியது எப்படி?

முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார்.

பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற அதிர்ச்சி சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சிறுமிகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள் அதிகரித்தவண்ணமே தொடர்கிறது. போஸ்கோ சட்டம் வந்த பிறகும், இதுதொடர்பான புகார்கள் அதிகரித்தே காணப்படுகிறது. பெண்கள், சிறுமிகளுக்கு வெளிநபர்களால் தான் இந்த தொல்லைகள் எல்லாம் வரும் என்று நாம் நினைத்திருந்தால் அது தவறு. அவர்களை சார்ந்தவர்கள், நெருங்கிய உறவினர்கள் மூலமே அவர்கள் இந்த கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோல அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா நகரில் 8 வயது சிறுமி தனது சொந்த தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் சடலம் கடந்த சனிக்கிழமை குணாவில் உள்ள கிணற்றில் மிதந்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டிலுக்கு அடியில் மறைந்து கொண்டு பாலியல் சீண்டல்... ரத்தம் சொட்ட சொட்ட ஓடிய மர்மநபர்... திண்டிவனத்தில் பரபரப்பு

சம்பவம் நடந்த பகுதி, குணா மாவட்டத்தின் சச்சௌரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இந்நிலையில், சனிக்கிழமை கிணற்றில் சிறுமியின் சடலம் மிதப்பதை கிராம மக்கள் கண்டனர். இது, புதன்கிழமை முதல் காணாமல் போன சிறுமியின் சடலம் என்பது தெரியவந்தது. அவரை காணவில்லை என குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர்களுக்கு சிறுமியின் தந்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த சம்பவம் நடந்த பிறகு,  நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளார். தாயும் சிறுமியின் தாத்தாவும் மகளைக் கண்டுபிடிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். மேலும், விசாரணையின் போது அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும் விசாரணையில், சிறுமி கடைசியாக தந்தையுடன் காணப்பட்டது தெரியவந்தது.

”வேலியே பயிரை மேய்ந்த கதை” - ஆசிரியர்களே மாணவர்களை மிரட்டி பாலியல் சீண்டல் - நெல்லையில் நடந்த கொடுமை

இதனைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்ட தந்தை காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். முதலில் சிறுமியின் ஒரு கையையும் காலையும் டவலால் கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டவர் கூறினார். இதையடுத்து, கிணற்றில் வீசியுள்ளார். இதற்கு முன், அவர் ஒரு பண்ணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தது போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget