மேலும் அறிய

Crime: கத்திக் குத்து காயங்களுடன் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி... திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சோகம்...!

சத்தீஷ்கரில் புதுமணத் தம்பதி திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டின் அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : சத்தீஷ்கரில் புதுமணத் தம்பதி, திருமண வரவேற்புக்கு முன்பாக வீட்டு அறையில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம்(24). இவருக்கு கஹ்காஷா பானு (22) என்பவருடன் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெறுவதாக இருந்தது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துக் கொண்டிருந்தது.  புதுமணத் தம்பதி தங்களது அறையில் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த அறையில் இருந்து மணப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு மணமகனின் தாய் ஓடிச் சென்றார்.  அறையின் உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த அந்த கதவை தட்டினார். கதவு திறக்கப்படாததால் அவரும் மற்றவர்களும் அறை ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அறைக்குள் மணப்பெண்ணும், மணமகனும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை உடைத்து பார்த்த போது இருவரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடம்பில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, புதுமண தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கத்தியையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ”கணவன் மனைவிக்குள் ஏதேனும் வாக்குவாதம் நடத்திருக்கலாம். அதில் அஸ்லம், மனைவி கஹ்காஷா பானுவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முழு விசாரணைக்கு பிறகே உண்மை வெளிவரும்" என்று கூறப்படுகிறது. புதுமணத் தம்பதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். அதே பகுதியைச் சேர்ந்த ரச்சனா என்ற பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  இவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. அப்படிதான் ஒரு நாள் அதாவது டிசம்பர் 25-ம் தேதி இரவு சந்தித்தனர். அவர்கள் காசியாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்தனர். சுமார் அரை மணி நேரம் கழித்து தான் புறப்படுவதாக கௌதமிடம், ரச்சனா கூறினார்.

இதற்கு கௌதம் தன்னுடம் இரவு தங்க வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கு அந்த இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில் ரச்சனாவை, கௌதம் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பிறகு தன்னுடன் தங்க மறுத்த ஆத்திரத்தில் ரச்சனாவை, கௌதம் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பின்பு அவரை போலீசார் கைது செய்தனர். 


மேலும் படிக்க

“கன்னத்தில் அறைந்ததால் கோபம் வந்துவிட்டது” - கணவரை 7 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி!

Crime: தூத்துக்குடியில் பயங்கரம்; ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை - தொடரும் பழிக்கு பழி கொலைகள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget