மேலும் அறிய

Crime: வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்! நீதிபதி செய்த கொடூரம் - திரிபுரா நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

வாக்குமூலம் அளித்த பெண்ணிடம் குற்றவியல் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

Crime: வாக்குமூலம் அளித்த பெண்ணிடம்  குற்றவியல் நீதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

திரிபுரா நீதிமன்றத்தில் பரபரப்பு:

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  இந்த நிலையில், தற்போது திரிபுராவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும் 23 வயதான பெண் ஒருவரை கடந்த 13ஆம்  தேதி வீடு புகுந்து மிரட்டி 26 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து புகாரை அளித்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி மாஜிஸ்திரேட் மூலம் வாக்குமூலம் அளிக்க வரும்படி அந்த பெண்ணிடம் கூறியுள்ளது 

கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி திரிபுராவின் கமால்பூர் முதல் வகுப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்ற  அறைக்கு வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணை குற்றவியல் நடுவர் (மாஜிஸ்திரேட்) பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். 

வாக்குமூலம் அளிக்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு:

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், "பிப்ரவரி 16ஆம் தேதி எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அறைக்குச் சென்றேன். பெண் போலீசாரை அறைக்கு வெளியே இருக்கும்படி நீதிபதி கூறினார்.  இதன்பின் கதவை முடிய நீதிபதி எனக்கு என்ன நடந்தது என்று கூறும்படி கேட்டார்.

நான் வாக்குமூலம் அளித்தேன். அப்போது, மாஜிஸ்திரேட் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். நான் அவரது அறையை விட்டு வெளியே விரைந்து வந்து வழக்கறிஞர்கள் மற்றும் எனது கணவருக்கு சம்பவம் குறித்து தெரிவித்தேன்" என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர், கமல்பூர் பார் அசோசியேஷனில் தனியாக புகார் அளித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், நீதிபதி கவுதம் சர்க்கார் தலைமையில் மூன்று பேர் குழு விசாரணை நடத்தி வருகிறது.

மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நீதிமன்ற வளாகத்தில் கமால்பூர் பார் அசோசியேஷன் உறுப்பினர்களை சந்தித்து, பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து  விசாரித்து வருகிறோம் என்று கூறினர். நீதி வழங்க வேண்டிய குற்றவியல் நீதிபதியே பாலியல் தொந்தரவு செய்ததாக  23 வயது பெண் புகார் அளித்தது திரிபுராவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime: கர்ப்பிணிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை! தீ வைத்து எரித்த கொடூர கும்பல் - நடந்தது என்ன?

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியிட மாறுதல் கலந்தாய்வு.! விண்ணப்பிக்க அழைப்பு- கடைசி தேதி எப்போது.?
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
Embed widget