Crime : தாலி கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு பெண் கொலை...கணவர் செய்த கொடூரம்...என்ன நடந்தது?
Crime : சென்னையில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Crime : சென்னையில் நள்ளிரவில் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் பவித்ரா(28). இவர் சில வருடங்களுக்கு முன், செங்குன்றதைச் சேர்ந்த ரெஜிஸ்(35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அம்பத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிந்த வந்த பவித்ராவுக்கு, அதே பகுதியை சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ராஜா (33) என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்,ராஜா சரமாரியாக பவித்ராவை தாக்கியதால் அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். பின்பு, பவித்ராவை தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. பவித்ராவை கொலை செய்து, அந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜ் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான தனிப்படை அமைத்து, தப்பியோடிய ராஜாவை தேடி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க
Crime : காதலும் கட்டாய மதமாற்றமும்...? 17 வயது சிறுமி செய்த விபரீத செயல்... நடந்தது என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















