மேலும் அறிய

Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

வழிப்பறி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில்வழக்கு பதிவு செய்து திருநங்கைகளிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் பணத்தை மீட்டு திருநங்கைகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருநங்கைகள் கைது.


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

கரூரில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 2 பவுன் செயின் மற்றும் 27 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் எஸ்பி உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கரூர் நகர காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கரூர் பேருந்து நிலையம் அருகில் இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம், தாராபுரம், மூலனூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற போது பேருந்து நிலையத்தில் இருந்த இசைப்பிரியா (24), ராகவி (27), தில்ஷிகா(23), இனியா (22) ஆகிய திருநங்கைகள் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் மற்றும் ரூ.27,500/- பணத்தை பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.

 


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து திருநங்கைகளிடமிருந்து 2 பவுன் செயின் மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர், அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கரூர் நகர காவல் நிலையத்தில் திருநங்கைகள் மீது வழக்கு பதிவு செய்து திருநங்கைகள் வழிப்பறி செய்த நகை மற்றும் பணத்தை மீட்டது தொடர்பாக, கேள்விபட்டு மேற்படி சம்பவத்தை போன்று திருநங்கைகளிடம் நகை மற்றும் பணத்தை இழந்தவர்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கரூர் நகர காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

 

கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் யாசகம் என்ற பெயரில் இளைஞர்களிடம் அராஜகத்தில் ஈடுபட்டு உருட்டு கட்டையுடன் தாக்குதல் நடத்தியதாக  திருநங்கைகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் பொதுமக்கள் புகார் மற்றும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆதாரங்களைக் கொண்டு  திருநங்கைகள் சுமார் 10 பேரை கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து திருநங்கைகள் போலீசாரை சூழ்ந்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவுவதால் அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு, காவல் நிலைய நுழைவு வாயில் கதவுகள் சாத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது
இதேபோல கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் மினி பேருந்து நிலையம் சுக்காலியூர் பைபாஸ் சேலம் சாலை ஜவகர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் திருநங்கைகள் வழியில் செல்பவரிடம் அடாவடியாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அட்டகாசம் செய்து அரசு பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். அதே நிலையில் அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் தகாத வார்த்தையை பேசியபடி உருட்டு கட்டையால் தாக்க சென்றனர்.


Crime: கரூரில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 4 திருநங்கைகள் கைது

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கரூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், திருநங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும் மாதம் தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு திருநங்கைகளுக்கான பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில் அதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டமும் திருநங்கைகளிடம் தொழில் தொடங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனை முறையாக பயன்படுத்தி திருநங்கைகள் தொழில் செய்து தங்களது வாழ்வாரத்தை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது
"கொலை வழக்காக மாற்ற சட்டத்தில் இடமில்லை?" - சாத்தங்குடி வழக்கில் திருமாவளவன் உடைத்த உண்மை!
Whats App - ல் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவன் !! நிஜம் என நம்பி மனைவி தற்கொலை
Whats App - ல் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த கணவன் !! நிஜம் என நம்பி மனைவி தற்கொலை
ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?
ரூ. 2 கோடி கேட்டு மிரட்டல் !! சாலையில் காரோடு கடத்தப்பட்ட தொழிலதிபர் - பின்னணி என்ன ?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
TVK Alliance: வைகோவா? திருமாவா? தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? விஜய் முடிவு என்ன?
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
இலவச சைக்கிள் முதல் லேப்டாப் வரை... கொட்டிக்கொடுக்கும் சலுகைகளுடன் அரசு ITI சேர்க்கை!
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
கரூர் செல்லும் விஜய்; 41 பேர் குடும்பங்களுக்கு நேரில் அரசு வேலை வழங்கப்போகும் முதலமைச்சர்?
TVK Vs DMK: சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
சிறந்த வாஷிங் மெஷின் யார்? தவெக Vs திமுக இடையே கடும் போட்டி - அதிர்ச்சி தரும் பட்டியல்
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?
Tata Car Offers: 1.2 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அறிவித்த டாடா - எந்த காருக்கு எவ்ளோ?
Embed widget