மேலும் அறிய

Crime: பெற்ற மகளையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த பெற்றோர்! ஏன் இந்த கொடூரம்?

தெலங்கானாவின் பெற்ற மகளை தந்தை மற்றும் தாய் இணைந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சமீபகாலமாக குடும்ப வன்முறைகள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் நம் மனதை அதிர்ச்சியில் உறைய வைக்கும் வகையில் ஒரு சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.

இளம்பெண் திடீர் மரணம்:

தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது கரீம்நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது நேரெல்லா பகுதி. இந்த பகுதியில் வசிப்பவர் செப்யலா நர்சையா. இவருக்கு வயது 49. இவரது மனைவி யெல்லவ்வா. அவருக்கு வயது 43. இவர்களது மகள் பிரியங்கா. அவருக்கு வயது 24 ஆகும்.

பிரியங்காவிற்கு திருமணமாகி ஒரு வயதே ஆன குழந்தை உள்ளது. இந்த நிலையில், இந்த பெண் சமீபநாட்களாக அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென பிரியங்கா கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து பிரியங்காவின் கணவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மனநல பிரச்சினை:

ஆனால், பிரியங்காவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கிராமத்தினர் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, காவல்துறையினர் பிரியங்காவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. உயிரிழந்த பிரியங்கா கடந்த சில வருடங்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்துள்ளனர். இருப்பினும் பிரியங்காவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தும் வந்துள்ளனர். ஆனாலும், எந்த பலனும் அளிக்கவில்லை.

இந்த சூழலில், பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. அவரது மனநல பிரச்சினைக்கு நடுவிலே அவருக்கு திருமணமும் நடைபெற்று குழந்தையும் பிறந்துள்ளது. பிரியங்கா குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கும், கோயில்களுக்கும் அழைத்துச் சென்று வந்துள்ளனர். ஆனால், பிரியங்கா மனநல பிரச்சினை குணம் அடையாமலே இருந்து வந்துள்ளது.

பெரும் அதிர்ச்சி:

இந்த சூழலில், பிரியங்காவை அவரது பெற்றோர்களே தங்களது வீட்டில் வைத்து பராமரித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பிரியங்கா மன நல பிரச்சினையால் மிகவும் அவதிப்படுவதால் அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியதாக கூறப்படுகிறது. இதனால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, வீட்டில் பிரியங்கா தூங்கிக் கொண்டிருந்தபோது அவரின் கழுத்தை அவரது பெற்றோர்களே கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.

பின்னர், அடுத்த நாள் காலையில் அதை இயற்கை மரணம் போல காட்டுவதற்காக பிரியங்காவின் பெற்றோர்கள் இருவரும் நாடகம் ஆடியுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, செப்யலா நர்சையா – யெல்லவ்வாவை போலீசார் கைது செய்தனர். மன நல பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பெற்றோர்களே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: MS Dhoni: தோனியின் எதிர்கால திட்டம் என்ன? ஐபிஎல் உண்டா? இல்லையா? எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட்

மேலும் படிக்க: கணவனை மாட்டி விட நினைத்த மனைவியின் பலே நாடகம் - போலீஸை அதிர வைத்த சம்பவம் ?

                                                                                                        

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget