மேலும் அறிய

முகநூல் காதல் வலை: சென்னை தொழிலதிபரை ஏமாற்றி நகை, பணம் பறித்த பெண் கைது

முகநுாலில் பழகிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரை காரில் கடத்தி பணம் பறித்த பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

முகநூல் மூலம் பெண் பழக்கம்

சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் முரளி ( வயது 47 ) பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவருக்கு சில நாட்களுக்கு முன் சமூக வலை தளமான முகநூல் பக்கத்தில் பூஜா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நெருங்கி பழகி அடிக்கடி தனியாக சந்தித்துள்ளனர். கடந்த 30 - ம் தேதி அரும்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில், தொழில் ரீதியாக அறை எடுத்து முரளி தங்கியுள்ளார். அப்போது அப்பெண்ணையும் அழைத்து , இருவரும் மது அருத்தி அதே அறையில் தங்கியுள்ளனர்.

அப்போது , நள்ளிரவில் அறையின் கதவைத் தட்டி உள்ளே புகுந்த இருவரில் ஒருவர், பூஜாவின் கணவர் எனக் கூறி முரளியை மிரட்டியுள்ளார். பின் வெளியில் அழைத்து சென்று அவரது காரிலேயே கடத்தி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி அறையில் கட்டி வைத்துள்ளனர். அங்கு முரளியை சித்ரவதை செய்து , 9  சவரன் நகை, பணம், மொபைல் போன் செயலி வாயிலாக , 20,000 ரூபாய் பணத்தை பறித்து தப்பியுள்ளனர்.. இதுகுறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

பெண் உட்பட 4 பேர் கைது

அப்போது , பணம் பெற்ற வங்கி கணக்கில் அடிப்படையில், சம்பவத்தில் ஈடுபட்ட விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக் ( வயது 32 ) அவரது நண்பர் பூபாலன் ( வயது 32 ) சினேகா ( வயது 32 ) திருப்பூரை சேர்ந்த சுந்தர மூர்த்தி ( வயது 37 ) ஆகிய நால்வரை கைது செய்தனர். விசாரணையில் நண்பர்களான நால்வரும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல திட்டங்களை தீட்டி வந்துள்ளனர். அப்போது முகநுால் பக்கத்தில் ரியல் எஸ்டேட் விளம்பரம் செய்த முரளியிடம் பணம் இருப்பதை அறிந்துள்ளனர்.

போலி கணக்கு மூலம் காதல் வசனம்

இதற்காக பூஜா என்ற பெண் பெயரில் போலி முகநூல் கணக்கை துவங்கிய அவர்கள் , சினேகா மூலம் முரளியிடம் காதல் வசனம் பேசி , அழைத்து பணம் பறித்துள்ளனர். உல்லாசமாக இருந்து விட்டு பணம் பறித்தால் புகார் அளிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில், இச்செயலில் ஈடுபட்டதாகவும் கைதானோர் வாக்கு மூலம் அளித்துள்ளனர். இதே போல், வேறு நபர்களிடம் மோசடி செய்துள்ளனரா என , போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget