மேலும் அறிய

Chennai: திருமணமான 22 நாளில் காதலனுடன் எஸ்கேப்பான புதுமணப்பெண்! 80 சவரன் நகை அபேஸ்! - கணவர் அதிர்ச்சி

" அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டில் வந்து பார்த்தபோது, 80 சவரன் நகையுடன் ஆர்த்தி வெளியேறியது தெரியவந்தது '

சென்னை திருமணமான  22 நாளில் 80 பவுன் நகையுடன் எஸ்கேப்பான புது மணப்பெண் போலீசார் தேடி வருகிறார்கள்.
 
 பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்
 
தாம்பரம் (Tambaram News):  சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருப்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). விக்னேஷ் சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி  (வயது 22 ) என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி .சர்ச் சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகும் போதே ஆர்த்தி சேலையூரில் உள்ள உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். 
 
மூன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்
 
விக்னேஷ் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு திருமணத்தின் பொழுது சுமார் 80 சவரன் நகை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22 நாளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், ஆர்த்தி,  கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் , கல்லூரியில் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார்கள் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, வந்து விடுவதாக கணவர் விக்னேஷிடம் கூறி கடந்த மூன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். 
 
பெண் காணவில்லை என வழக்கு பதிவு
 
நீண்ட நேரமாகியும் வராததால் கல்லூரியில் போய் தேடி உள்ளனர். அங்கேயும் அவர் இல்லாததால் அவருடைய மொபைல் எண்ணிற்கு ஃபோன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டில் வந்து பார்த்தபோது,  80 சவரன் நகையுடன் ஆர்த்தி வெளியேறியது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இதனை அடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில், விக்னேஷ் புகார் செய்தார். பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 
மாயமான சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை
 
விசாரணையில் திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சேந்தமங்கலம் பகுதியில் தாம்பரம் போலீசார் சென்று விசாரணை நடத்திய போது ஆகாஷின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது பெற்றோர்கள் உட்பட அனைவரும் தலைமறைவாகி‌ இருந்தனர். ஆகாஷ் மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தியை ஆகாஷ் அழைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள். புதுமணப்பெண் நகையுடன் மாயமான சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget