மேலும் அறிய

Chennai: திருமணமான 22 நாளில் காதலனுடன் எஸ்கேப்பான புதுமணப்பெண்! 80 சவரன் நகை அபேஸ்! - கணவர் அதிர்ச்சி

" அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டில் வந்து பார்த்தபோது, 80 சவரன் நகையுடன் ஆர்த்தி வெளியேறியது தெரியவந்தது '

சென்னை திருமணமான  22 நாளில் 80 பவுன் நகையுடன் எஸ்கேப்பான புது மணப்பெண் போலீசார் தேடி வருகிறார்கள்.
 
 பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்
 
தாம்பரம் (Tambaram News):  சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருப்பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). விக்னேஷ் சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தி  (வயது 22 ) என்பவருக்கும் கடந்த மாதம் 11ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள ஏ.ஜி .சர்ச் சில் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகும் போதே ஆர்த்தி சேலையூரில் உள்ள உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். 
 
மூன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்
 
விக்னேஷ் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு திருமணத்தின் பொழுது சுமார் 80 சவரன் நகை போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22 நாளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில், ஆர்த்தி,  கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டணம் செலுத்தாததால் , கல்லூரியில் கடிதம் எழுதி கேட்டிருக்கிறார்கள் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, வந்து விடுவதாக கணவர் விக்னேஷிடம் கூறி கடந்த மூன்றாம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். 
 
பெண் காணவில்லை என வழக்கு பதிவு
 
நீண்ட நேரமாகியும் வராததால் கல்லூரியில் போய் தேடி உள்ளனர். அங்கேயும் அவர் இல்லாததால் அவருடைய மொபைல் எண்ணிற்கு ஃபோன் செய்து பார்த்தபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் வீட்டில் வந்து பார்த்தபோது,  80 சவரன் நகையுடன் ஆர்த்தி வெளியேறியது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் வீட்டிலும் விசாரித்துள்ளனர். இதனை அடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில், விக்னேஷ் புகார் செய்தார். பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 
மாயமான சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை
 
விசாரணையில் திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சேந்தமங்கலம் பகுதியில் தாம்பரம் போலீசார் சென்று விசாரணை நடத்திய போது ஆகாஷின் வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது பெற்றோர்கள் உட்பட அனைவரும் தலைமறைவாகி‌ இருந்தனர். ஆகாஷ் மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆர்த்தியை ஆகாஷ் அழைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள். புதுமணப்பெண் நகையுடன் மாயமான சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget