மேலும் அறிய

Crime : அவாய்டு செய்த காதலி! ஆத்திரத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்

இரண்டு ஆண்டுகளாக தன்னை காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டு சென்றதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.

இரண்டு ஆண்டுகளாக தன்னை காதலித்த கல்லூரி மாணவி தன்னை விட்டு சென்றதால் ஆத்திரத்தில் கத்தியால் குத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தேனாம்பேட்டையில் உள்ள மகளிர் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த திங்கட் கிழமை மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கல்லூரி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சக மாணவிகளுடன் ராணி காத்திருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் ராணியிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு ராணி, சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றார். ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் மாணவியின் முகத்தில் குத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டார்.

ராணி ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்த பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே, தேனாம் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி அந்த நபரிடம் சிறிது நேரம் போராடியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

பிறகு போலீசார் தப்பி ஓடிய வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த 19 வயதான பிரசாந்த் என்றும், இவர் கத்தியால் குத்திய மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று சுற்றியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும், இனி பிரசாந்த்தை பார்க்க கூடாது என்று மாணவியை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதனால் மாணவி கடந்த 2 மாதங்களாக பிரசாந்தை சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். பலமுறை தனது காதலியை பார்க்க கல்லூரிக்கு வந்தும் அவர் பிரசாந்திடம் பேசாமல் சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, தனது காதலியின் தோழிகள் மூலம் அறிந்து கொண்ட பிரசாந்த், தனக்கு கிடைக்காத அவள், யாருக்கும் கிடைக்ககூடாது என்று முடிவு செய்து கத்தியால் குத்தி கொலை செய்யும் நோக்கில் கல்லூரி முன்பு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

அதைதொடர்ந்து தேனாம்பேட்டை போலீசார் தனது மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததை தெரிந்து கொண்ட பிரசாந்த் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்திருக்கிறார்.  அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
புத்தக திருவிழாவில் சினிமா நடிகர்- நடிகைளுக்கு அழைப்பு! குவியும் எதிர்ப்புகள்- அரசு சொல்வது என்ன?
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா? எடப்பாடி, அண்ணாமலை கண்டனம்!
TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை - எங்கெங்க தெரியுமா.? முழு விவரம்
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
அட சாமி.!! நொய்டா இளைஞர் அக்கவுண்ட்டில் விழுந்த எண்ண முடியாத அளவு பணம்.! பிறகு நடந்தது என்ன.?
Chennai Power Shutdown: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 7 வியாழக்கிழமை நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது - உஷார்.!
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Embed widget