மேலும் அறிய

Crime: பிரபல ரவுடி குள்ள விஷ்வா என்கவுன்டர்... மிரளவைக்கும் பின்னணி சம்பவங்கள்

Crime: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடி விஷ்வா போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.மிரளவைக்கும் பின்னணி சம்பவங்கள்

கோவில்கள் நிறைந்த மாவட்டமாக இருந்த காஞ்சிபுரம், தொழிற்சாலை நிறைந்த மாவட்டமாக உருவெடுக்க துவங்கியதை அடுத்து, தற்பொழுது ரவுடிகள் நிறைந்த மாவட்டமாக மாறி வருகிறது. தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் தாதாக்கள் உருவாகுவதும், குட்டி ரவுடிகள் அட்டகாசம் செய்வதும் தொடர்கடையாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தாதாவாக வலம் வந்த படப்பை குணாவின் கொட்டத்தை காவல்துறையினர் சமீபத்தில் அடக்கினர்.  இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி பல குட்டி ரவுடிகளும் , பழைய ரவுடிகளும் தலைதூக்க துவங்கினர். அது போன்று சென்னை புறநகரில் ரவுடிசம் செய்து வந்த சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் கூடுவாஞ்சேரி பகுதியில் கடந்த மாதம் என்கவுன்டர் செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், கடந்த வாரம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோக்கண்டி என்ற பகுதியில் பிரபல ரவுடி , குள்ள விஷ்வா என்கிற விஸ்வநாதன் போலீசாரால் என்கவுன்டர் செய்து கொலை செய்யப்பட்டார். விஸ்வா மீது, 5 கொலை வழக்கு, 7 கொலை முயற்சி வழக்கு, 5 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 25 வழக்கிற்கு மேல் நிலுவையில் உள்ளன.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் பிபிஜி குமரன். கடந்த 2012 ஆம் ஆண்டு,  பி.பி. ஜி . குமரன் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். விஷ்வா பிபிஜி குமரனின் ஆதரவாளராக இருந்து வந்துள்ளார். பிபிஜி குமரனின் கொலை வழக்கில் தொடர்புடைய மண்ணூர் குட்டி என்பவரை, விஷ்வா தனது ஆதாரவாளர்களுடன் சேர்ந்து பிபிஜி குமரனுக்காக , மண்ணூர் குட்டியை கொலை செய்தார்.


இதனை அடுத்து அப்பகுதியில் பிரபல ரவுடியாக உருவெடுத்த விஷ்வா பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். சமீபத்தில் நடந்த பல்வேறு தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் விஷ்வா பின்னணியில் தனது ஆதரவாளர்களை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை வழக்கிலும் விஸ்வாவிற்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றது. இதன் பின்னணியில், விஷ்வா இருப்பதாக காவல்துறையினர் சந்தேகித்திருந்தனர். இந்த நிலையில் தான் நடந்தேறி இருக்கிறது இந்த என்கவுன்டர் சம்பவம்.

கடந்த மாதம் 28ஆம் தேதி தன்னை என்கவுன்டரில் கொலை செய்து விடுவதாக உதவி ஆய்வாளரிடம் பேசியதாக வீடியோவை வைத்து விஷ்வா புகார் கொடுத்து இருந்த நிலையில் இந்த கொடூர என்கவுன்டர் சம்பவம் நடந்தேறி இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் அடிக்கடி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடிகள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் சட்ட ஒழுங்கு கூடுதல் Adgp அருண் தலைமையில் தனிக்குழு அமைத்து ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள முடக்கி விடப்பட்டது.  இந்த நிலையில்  காஞ்சிபுரத்திற்கு மகளிர் உரிமைத்தொகை திட்ட துவக்க விழாவிற்கு காஞ்சிபுரம் வந்து சென்றார். இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் விஷ்வா என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளார்

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஏடிஜிபி அருண், கொலை வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி குல்லா என்கின்ற விஸ்வா என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் அவருடன் தொடர்பில் உள்ள அவரது கூட்டாளிகளையும் தேடி வருவதாகவும் அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் சுங்கவாசத்திரம் ஓரகடம் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget