மேலும் அறிய

Crime : காதலனுக்காக வீட்டைவிட்டு ஓடிய சிறுமி! மனைவி இல்லாத நேரத்தில் கணவன் செய்த காரியம்

தஞ்சாவூர்: சென்னை நெசப்பாக்கம் பகுதியை  சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லைன் என்றும் அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியின் காதலனையும் கைது செய்தனர்.

சென்னை நெசப்பாக்கம் பகுதியை  சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை. அவர் தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று புகார் தஞ்சை போலீசாருக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியின் புகைப்படத்தை வைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வாலிபருடன் அந்த சிறுமி நிற்பதை போலீசார் கண்டுள்ளார். உடன் அந்த சிறுமி மற்றும் வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இருவரையும் அழைத்து சென்று ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படிங்க: TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு

இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் அந்த சிறுமியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஜெகதீஸ்வரன் (24). கூலித் தொழிலாளி. இவர் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இதை சிறுமியும் நம்பி பழகி வந்துள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ்வரன் சென்னையிலிருந்து தனது ஊருக்கு வந்துவிட்டார்.

பின்னர் அந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்தபோது தஞ்சைக்கு புறப்பட்டு வா என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு சிறுமி தஞ்சாவூருக்கு புறப்பட்டுள்ளார். இத்தகவலை ஜெகதீஸ்வரனுக்கும் தெரிவித்துள்ளார். அப்போது ஜெகதீஸ்வரன் இப்போது பேசிக் கொண்டு இருக்கும் சிம்மை கழற்றி விட்டு வேறு ஒரு சிம்மில் இருந்து பேசு என்று தெரிவித்துள்ளார். அதேபோல் சிறுமியும் செய்துள்ளார்.

பின்னர் கடந்த 13ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த சிறுமி ஜெகதீஸ்வரனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் ஜெகதீஸ்வரன் போனை எடுக்கவும் இல்லை. மறுபடியும் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி செய்வதறியாது அழுது கொண்டே தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது இதை கவனித்த ஒருவர் அந்த சிறுமியை அணுகி எதற்காக அழுகிறாய் என்று கேட்க தன்னை பற்றிய விபரங்களை சிறுமி அந்த நபரிடம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: என்ஜினியரை லெப்ட் ரைட் வாங்கிய நாமக்கல் கலெக்டர்! கையெடுத்து கும்பிட்ட மக்கள்!

இதையடுத்து அந்த நபர் என் வீட்டிற்கு வா. பின்னர் உன் காதலனுடன் உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று அக்கறைக்காட்டுவது போல் நடித்து தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சென்னைக்கு பஸ் ஏற்றி விடுவதற்காக மீண்டும் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த போது போலீசில் சிக்கி உள்ளார். இத்தகவல்களை சிறுமி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை விசாரித்துள்ளனர். இதில் அவர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சி.புவனேஸ்வரன் (30) என்பதும், வீட்டில் மனைவி இல்லாத நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்தனர். மேலும் சிறுமியை காதலித்த  ஜெகதீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பெண்கள் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
இரவிலும் விடாமல் அதிகாலையிலும் வந்த கொடூரன் !! மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் !! குழந்தைகள் கண் முன்னே மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்
"மனிதனை மனிதன் சுமப்பதா?" - விசிகவினர் வீதியில் இறங்கி போராட்டம்..!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai : ’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
’அண்ணாமலையுடன் இணையப்போகும் முக்கிய அரசியல் புள்ளி’ இவர்தான் அவர்..!
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
DMK: கருணாநிதிகிட்ட என்ன தான் கத்துக்கிட்டங்க..! பொறாமையில் பொங்கும் திமுகவினர், சாபம் விடும் உபிக்கள்
INDIA Alliance Meeting : ’திமுக இல்லாத இண்டியா கூட்டம்’ கேள்வி எழுப்ப கட்சிகள் திட்டம் – கலக்கத்தில் காங்கிரஸ்..?
'இண்டியா கூட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்’ நடக்கப்போவது என்ன?
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
அமைச்சர்களுக்கு தடை போட்ட CM விஜய்..! 5 தொகுதிகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு - தேர்தல் பணிகள் தீவிரம்
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Bose Venkat: விஜய் ஜெயிச்சாரு.. மொத்த மானத்தையும் வாங்கிய குடும்பம்.. போஸ் வெங்கட் வேதனை!
Tamilnadu Round Up: மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
மீண்டும் குறைந்த தங்கம் விலை, பதவிக்காக ஓடும் அதிமுகவினர்? திமுக சாடல் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Creta: SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
SUV-க்களின் கிங்கிற்கு சலுகைகளை வாரி வழங்கிய ஹுண்டாய் - இன்ஜின் & EV ரெண்டிற்கும் ஆஃபர்
DMK Alliance plan : இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?
இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?
Embed widget