மேலும் அறிய

14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு

காஞ்சிபுரம்,சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மேல் மதிப்புடைய அரசு நிலம் போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு என தெரியவந்துள்ளது

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வந்தது. இதற்கு இழப்பீட்டு தொகை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது.

14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா பீமன்தாங்கல் என்னும் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அரசு நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து 126 கோடி ரூபாய் இழப்பீடு பெற்ற வழக்கில், ஏற்கனவே ஆஷிஸ் மேத்தா மற்றும் செல்வம் ஆகியோர் கைது செய்யப் பட்டிருந்தனர். 83 நபர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு தற்போது வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
இந்நிலையில் பீமன்தாங்கள் நில மோசடி வழக்கு விவகாரம் பூதாகரமாக நிலையில் பீமன்தாங்கள் போலி பட்டா குறித்து 2007 ஆம் ஆண்டிலேயே நில நிர்வாக ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ்ராம் மிஸ்ரா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்னவென்றால், தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 46 கிராமங்களில் இருக்கக்கூடிய அரசுக்கு சொந்தமான இடங்களில் போலி பட்டா தயாரித்து மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் மேற்கண்ட 46 கிராமங்களில் அரசு நிலங்களை அரசுக்கு தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவும் பரிந்துரை செய்துள்ளார்.அதேபோல் மோசடியாக செய்யப்பட்ட நிலங்கள் அனைத்திற்கும் வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும் அறிவுறுத்தி உள்ளார். 

14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
ஆனால், 14 ஆண்டுகளாக மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் அரசு நிலங்கள் போலி பட்டா மூலம் ஆக்கிரமிக்கப்பட்டது. தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், பீமன் தாங்கள் கிராமத்தில் நடந்தது போல அரசுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று நிலத்தை ஆக்கிரமித்து அரசுக்கு  ஆயிரம் கோடி ரூபாய் வரை  இழப்பீடு ஏற்படுத்தப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த கடிதத்தில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஆஷிஸ் மேத்தா முறைகேடான முறையில் செட்டில்மெண்ட் தொகை பெற்றிருப்பதாக, அப்பொழுதே ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த ரமேஷ்ராம் மிஸ்ரா  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
அதேபோல் முறைகேடான முறையில் பட்டா பெற்றிருப்பதாகவும் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், தற்போது அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது . மேலும் சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் கோயம்பேடு ,மயிலாப்பூர் நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்..
14 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்த அதிகாரி..! கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர்கள்..! 1000 கோடி ஆக்கிரமிப்பு
 
தற்போது சிபிசிஐடி போலீசார் நிலமோசடி வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சிபிசிஐடி பீமன்தாங்கள் நில மோசடி தொடர்பாக போலீசார் மேலும் இரண்டு நபர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
விபத்து அல்ல கொலை! புதுச்சேரி இளம்பெண் மரணத்தில் திடுக்கிடும் பின்னணி: முன்னாள் காதலன் சிறையில் அடைப்பு!
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
15 வயதில் காதல் திருமணம் !! கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
​60 பைக்குகள்... 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கொள்ளை கும்பல்!
​60 பைக்குகள்.. 2 லாரிகள்... வேலூர் வரை நீளும் நெட்வொர்க்! ஸ்ரீபெரும்புதூரில் சிக்கிய கும்பல்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
NEET UG Exam City Slip: நீட் மறுதேர்வு மைய விவரம் வெளியீடு; உடனே காண்பது எப்படி? ஹால் டிக்கெட் எப்போது?
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
ADMK: தீர்ந்துபோன சக்தி இல்ல.. உங்களை தீர்த்துக்கட்டப்போகும் சக்தி..! விஜய்யை விளாசித் தள்ளிய அதிமுக!
Kim Jong Un: ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
ஏவுகணை உற்பத்தியை 2.5 மடங்கு உயர்த்த உத்தரவு; வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியால் பரபரப்பு
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
’’கட்சியையே காப்பாத்த முடில; சிரிப்பாய் சிரிக்கும் சிலுவம்பாளையம்’’- ஈபிஎஸ்ஸுக்கு தவெக பதிலடி
Duster 1.0 Turbo Petrol Review: புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
புதிய ரெனால்ட் டஸ்டர் 1.0 டர்போ பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? வாங்குறது வொர்த்தா.? ரிவ்யூவ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
Upcoming Maruti SUVs: கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
கார் வாங்குற பிளான் இருக்கா.? Just வெயிட்.! நவீனமா, பவர்ஃபுல்லா 4 SUV-க்கள இறக்குது மாருதி; விவரம்
Embed widget