மேலும் அறிய

Crime: வீடு மாறி விசாரிக்கச் சென்ற பெண் போலீசார்... சரமாரியாக அடித்து உதைத்த முதியவர்கள்..! நடந்தது என்ன?

சென்னை, விருகம்பாக்கத்தில் வீடு மாறி விசாரிக்கச் சென்ற பெண் போலீசை மதுபோதையில் இருந்த நபர்கள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை, விருகம்பாக்கம் அருகே அமைந்துள்ளது குமரன் காலனி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் சொந்தமாக அந்த பகுதியில் ஸ்டூடியோ நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் வெளியூர் சென்றிருந்த இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூபாய் 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்தனர்.

இதுதொடர்பாக, விருகம்பாக்கம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பாக சந்தோஷ்குமாருக்கு சொந்தமான ஸ்டூடியோவின் முன்னாள் ஊழியரான சுரேஷ் என்பவரிடம் விசாரிக்க அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் போலீசார் செல்ல திட்டமிட்டனர்.


Crime: வீடு மாறி விசாரிக்கச் சென்ற பெண் போலீசார்... சரமாரியாக அடித்து உதைத்த முதியவர்கள்..! நடந்தது என்ன?

காவல் ஆய்வாளர் சுமதி, பெண் காவலர் இலக்கியா ஆகிய இருவரும் விருகம்பாக்கம் பகுதியில் சுரேஷ் வீட்டைத் தேடிச்சென்றுள்ளனர். ஆனால், அப்போது, சுமதி மற்றும் இலக்கியா இருவரும் சுரேஷ் வீட்டிற்கு பதிலாக வேறு ஒருவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கே பொன்னுவேல்(69) மற்றும் சுகுமார் (52) ஆகிய இருவர் இருந்துள்ளனர். அப்போது, பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வீடு மாறி வந்தது தெரியாத போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் இருந்த பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரும் யார் நீங்கள்? வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஏன்? என்று கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் தாங்கள் போலீஸ் என்று கூறியுள்ளனர். ஆனாலும், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியுள்ளது.


Crime: வீடு மாறி விசாரிக்கச் சென்ற பெண் போலீசார்... சரமாரியாக அடித்து உதைத்த முதியவர்கள்..! நடந்தது என்ன?

அப்போது, மதுபோதையில் இருந்த பொன்னுவேல், சுகுமார் இருவரும் இணைந்து பெண் போலீசார் சுமதி மற்றும் இலக்கியாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது, போலீஸ் ஜீப்பில் அமர்ந்திருந்த சக போலீசாரை உதவிக்கு அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சக போலீசார் பெண் காவல் ஆய்வாளர் சுமதி, பெண் காவலர் இலக்கியா இருவரையும் மீட்டனர். பின்னர், பொன்னுவேல் மற்றும் சுகுமார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் அளித்துள்ளனர். மதுபோதையில் பெண் போலீசாரை தாக்கிய பொன்னுவேல் மற்றும் சுகுமாரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். கொள்ளை வழக்கில் வீடு மாறி விசாரிக்க சென்று, மதுபோதையில் இருந்தவர்களால் பெண் போலீசார் தாக்குதலுக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Operation Durdant: “என் பக்கம் நியாயத்தை கேளுங்கள்; சிறையில் இருக்க விரும்பவில்லை” - பாடகர் சித்து கொலை குறித்து விவரிக்கும் தாதா

மேலும் படிக்க: ஆட்டோவில் செல்லும்போது விபத்து… காயமடைந்த நண்பரை காப்பாற்றாமல் பாதாள சாக்கடையில் வீசிச்சென்ற மூவர் கைது!

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
மயிலாடுதுறை கோவில் சிலைகள் காரைக்காலில் சிக்கியது எப்படி? காரைக்காலில் நள்ளிரவில் அதிரடி வேட்டை!
" உல்லாசமாக இருக்கலாம் " ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய பெண்
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
டாஸ்மாக் சென்று திரும்பியவருக்கு நேர்ந்த கொடூரம் !! மில் தொழிலாளி நள்ளிரவில் அடித்துக் கொலை
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!
crime: இன்ஸ்டாகிராம் மோகம்: மனைவியை கொன்று நிர்வாணமாக்கிய கணவன்; பகீர் வாக்குமூலம்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Cristiano Ronaldo: ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
ஓய்வை அறிவித்தாரா க்றிஷ்டியானோ ரொனால்டோ? தோல்விக்குப் பிறகு கண்ணீர் மல்க பேச்சு..
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
Entry Level Cars: எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
எண்ட்ரி லெவல் கார் போரடிச்சிடுச்ச்சா..! டக்கரான 5 மாடல்கள் - எஸ்யுவி தொடங்கி EV வரை, விலை
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Embed widget