![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video: பிரியாணி கடையில் மாமூல் கேட்டு அடாவடி செய்த திமுக கவுன்சிலரின் கொழுந்தன்...! - சிசிடிவி கேமராவால் கம்பி எண்ணும் பரிதாபம்
மாமூல் கேட்டு தராததால் டீக்கடை, மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர் கைது சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
![Watch Video: பிரியாணி கடையில் மாமூல் கேட்டு அடாவடி செய்த திமுக கவுன்சிலரின் கொழுந்தன்...! - சிசிடிவி கேமராவால் கம்பி எண்ணும் பரிதாபம் Chennai dmk counsellor chitra devi murali brother in law ask for money CCTV footage Watch Video: பிரியாணி கடையில் மாமூல் கேட்டு அடாவடி செய்த திமுக கவுன்சிலரின் கொழுந்தன்...! - சிசிடிவி கேமராவால் கம்பி எண்ணும் பரிதாபம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/30/8ce135077b0b3462fcb78b76764d4788_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தாம்பரம் மாநகராட்சியில் 31 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரின் உறவினரான உள்ள சித்ரா தேவியின் கணவர் முரளியின் தம்பி தினேஷ் (38). சமீபத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இவருடைய அண்ணி வெற்றி பெற்று அப்பகுதி கவுன்சிலராக பதவியேற்றதில் இருந்து "ஒயிட் அண்ட் ஒயிட் சகீதம் குட்டி தாதாவாக வலம் வரத் தொடங்கி அப்பகுதியில் இருக்கும் வணிக வளாகங்கள் சிறு சிறு கடைகளில் மிரட்டி பணம் பறித்து வந்து உள்ளார்.
மாமூல் கேட்டு தராததால் டீக்கடை, மற்றும் பிரியாணி கடையை அடித்து உடைத்த திமுக பிரமுகர் கைது சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது pic.twitter.com/0Ts9f6Ee8M
— Kishore Ravi (@Kishoreamutha) March 30, 2022
தினேஷ் மற்றும் அவரது குட்டி ரவுடி நண்பரான சுகுமார் (32), இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் மாமூல் வசூல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுகுமார் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அப்பகுதியில் இருக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுகுமாரை கண்டால் அச்சம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே சுகுமாரை முகமாக பயன்படுத்தி தினேஷ் மாமுல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திருநீர்மலை பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளில் மாமூல் கேட்டுள்ளனர். பணம் தர மறுக்கவே ஆத்திரத்தில் கடையை அடித்து உடைத்து தகராறு செய்துள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் சிசிடிவி காட்சிகளோடு சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக பிரமுகர் மற்றும் அவருடைய நண்பர் சுகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரும் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தினேஷ் அவருடைய நண்பர் சுகுமார் உடன் இணைந்து மாமூல் கேட்டு மிரட்டியதாக ஆதாரத்துடன் கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)