மேலும் அறிய

Crime : மனைவியின் நடத்தையில் சந்தேகம்..! துணி குவியலுக்குள் பிணமாக்கிய கணவன்..! போலீசிடமே நாடகம்..!

சென்னை, திருவொற்றியூரில் மனைவியை சந்தேகப்பட்டு கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி மைதிலி, இவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். ஒப்பந்த அடிப்படையில் மைதிலி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி திருவொற்றியூர் காவல்நிலையத்தில் மணிமாறன் புகார் ஒன்று அளித்தார். அதில், வேலைக்கு சென்ற தனது மனைவி மைதிலியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும்  கேட்டதாக மணிமாறன் கூறியிருந்தார். இதையடுத்து, காணாமல் போன மைதிலியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.


Crime : மனைவியின் நடத்தையில் சந்தேகம்..! துணி குவியலுக்குள் பிணமாக்கிய கணவன்..! போலீசிடமே நாடகம்..!

இந்த சூழலில், திருவொற்றியூர் இருந்து மணி செல்லும் பாதையில் புதியதாக கட்டப்பட்டு வந்த பாலத்திற்கு கீழே பழைய துணிகள் கிடந்த துணிக்குவியலில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அங்கே சென்று பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, துணிக்குவியலுக்குள் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

பின்னர், அந்த சடலம் மைதிலி என்பதை போலீசார் உறுதி செய்தனர். மைதிலி உயிரிழந்தது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த போலீசார், மைதிலி கடைசியாக அவருடன் பணியாற்றிய ஜெய்சங்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்ததை அறிந்தனர். இதையடுத்து, ஜெய்சங்கரை அழைத்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

ஜெய்சங்கர் மைதிலியுடன் பணிபுரியும் நபர் என்றும், ஜெய்சங்கர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மைதிலி லிப்ட் கேட்டு வந்தபோது மணிமாறன் இவர்கள் இருவரையும் பார்த்துள்ளார். தன்னுடைய மனைவி ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் வருவதைப் பார்த்த மணிமாறனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தை வழிமறித்து இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது.


Crime : மனைவியின் நடத்தையில் சந்தேகம்..! துணி குவியலுக்குள் பிணமாக்கிய கணவன்..! போலீசிடமே நாடகம்..!

இதையடுத்து, மணிமாறனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மனைவியின் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். பின்னர், திருவொற்றியூரில் இருந்து மணலி செல்வதற்காக கட்டப்பட்டு வந்த பாலத்திற்கு கீழே  மணிமாறனும், மைதிலியும் அமர்ந்து இதுதொடர்பாக பேசியுள்ளளனர்.

அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கே கிடந்த பழைய துணியை எடுத்து மைதிலியின் கழுத்தை மணிமாறன் நெரித்துள்ளார். அதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதிலி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, மணிமாறன் அங்கே கிடந்த பழைய துணி மூட்டைக்குள் மனைவியின் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்றுவிட்டு காவல்நிலையத்தில் ஒன்றுமே தெரியாதது போல புகார் அளித்துள்ளார். ஜெய்சங்கரை கொலைச் சதியில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மணிமாறன் போலீசார் விசாரணையில் செய்த தவறை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!
" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 212 கி.மீட்டர் மைலேஜ்.. TVS-சின் அட்டகாசமான 3 இ ஸ்கூட்டர்கள் என்னென்ன?
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
காலை உணவுத் திட்டத்துக்கு எஸ்டி திட்ட நிதியா? வெளியான அதிர்ச்சித் தகவல்; உடனே மாற்ற கோரிக்கை!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
IND vs ZIM: வெற்றிப்பாதைக்கு திரும்புமா இந்தியா? ஜிம்பாப்வேயுடன் தொடங்கியது டி20 யுத்தம்! கலக்கல் பவுலிங்!
Embed widget