மேலும் அறிய

Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!

ஆடைக்குள்ளும், உடலுக்குள்ளும் மறைத்து வைத்து கொண்டு வந்த, உகாண்டா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

எத்தியோப்பியன் நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் பெருமளவு போதைப் பொருட்களை கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதை அடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், பெண் சுங்க அதிகாரிகள் உட்பட்டோா், அந்த விமானத்தில் வந்த 217 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகத்திற்கிடமான, குறிப்பாக  வெளிநாட்டுப் பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். 

Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!
 
உள்ளாடைகள், மற்றும் உடலுக்குள்...
 
அப்போது உகாண்டா நாட்டை சோ்ந்த நம்பீரா நோலீன் என்ற  பெண் பயணி மருத்துவ விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவா் விசாரணையில்  முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதை அடுத்து அந்த பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று பெண் சுங்க அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அவருடைய உள்ளாடைகள், மற்றும் உடலுக்குள் கொக்கையின் போதை பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சுங்க அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருள் 3.250 கிலோ இருந்தது. அதன் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ.35 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
கடந்த சில மாதங்களாக இந்த குறிப்பிட்ட ஏா்லைன்ஸ்  விமானத்தில் பெருமளவு போதை பொருள் கடத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. இந்த விமானம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் புதிதாக சென்னைக்கு விமான சேவையை தொடங்கியது. இந்த குறிப்பிட்ட விமானத்தில் பெருமளவு போதைப் பொருள் கடத்தப்பட்டு வருவது, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Crime : உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருள் கடத்தல்..! எத்தியோப்பிய பெண் கைது..!
 
துடைப்பானுக்குள் மறைத்து கடத்தப்பட்ட தங்கக்குச்சிகள்...! சென்னை விமான நிலையத்தில் நூதன கடத்தல் முயற்சி.
 

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர்,  இரவு சுமார் 11.40 மணியளவில் எல். ராம்குமார் என்ற தூய்மைப் பணியாளர், தளம் துடைக்க பயன்படுத்தும் துடைப்பத்தினை எடுத்துக்கொண்டு போக்குவரத்துப் பகுதிக்கு வந்தார். ராம்குமார் துடைப்பத்தை டோர் ஃபிரேம் மெட்டல் டிடெக்டருக்கு (டிஎஃப்எம்டி) வெளியே வைத்துக்கொண்டு, சோதனைக்கு சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.  மேலும், அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) ஊழியர்கள், தூய்மைப் பணியாளரின் நடமாட்டம் குறித்து சந்தேகம் அடைந்து, அவர் எங்கு செல்கிறார் என்று கவனித்து வந்துள்ளனர். 

அவரிடம்  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் தூய்மை பணியாளரிடம் எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, போக்குவரத்து பகுதி மற்றும் அருகிலுள்ள பிற இடங்களை சுத்தம் செய்யப் போவதாக பதிலளித்தார். இந்த பதில் பாதுகாப்பு அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்தது. இதனால் அவரை ஸ்கேனர் உள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, ஸ்கேனரின் கீழ் சுத்தம் செய்யும் துடைப்பத்தை வைத்தபோது, ​​சுத்தம் செய்யும் துடைப்பானின் கைப்பிடி குழாயின் உள்ளே சில பொருட்களின் அடர்த்தியான உருவம் தென்பட்டுள்ளது. 

இதனால், துடைப்பானின் கம்பியை திறந்து பரிசோதனை செய்ததில், கருப்பு நாடாவால் சுற்றப்பட்ட பத்து சிறிய துண்டுகள் குச்சி போல இருந்தது. அந்த துண்டுகளை மேலும் பரிசோதனை செய்து பார்த்ததில்,  அது தங்க குச்சிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.811 கிலோ எடையுள்ள, தங்கக் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பின்னர் தூய்மைப் பணியாளர் எல்.ராம்குமார் AIU அதிகாரிகளிடம்  விசாரணைக்காக  ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட இந்த தங்க குச்சிகள் எங்கு இருந்து? யார் மூலம் வந்தது? யார் இந்த கடத்தலுக்குப் பின்னர் உள்ளனர் என்றெல்லாம் கேள்வி எழுப்பி விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் நூதனமான முறையில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகளை போலீசார் கைது செய்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கடற்கரையில் கொடூரம் ; கல்லூரி மாணவியை சீரழித்த 3 பேர் !! திருட்டு நகையை பதுக்கிய தாய்
கடற்கரையில் கொடூரம் ; கல்லூரி மாணவியை சீரழித்த 3 பேர் !! திருட்டு நகையை பதுக்கிய தாய்
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
வைக்கோலுக்குள் மறைந்திருந்த போதை சரக்கு… திருவையாறில் அதிரடி பறிமுதல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
முழுமை பெற்ற அமைச்சரவை; அண்ணா, பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வர் விஜய்- ஆதவ் அர்ஜூனா புகழாரம்
முழுமை பெற்ற அமைச்சரவை; அண்ணா, பெரியார் கனவை நிறைவேற்றிய முதல்வர் விஜய்- ஆதவ் அர்ஜூனா புகழாரம்
Mk Stalin dmk : கடுஞ்சொற்களைப் பேசாதீங்க.! திமுகவினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்- காரணம் என்ன.?
கடுஞ்சொற்களைப் பேசாதீங்க.! திமுகவினரை எச்சரித்த மு.க.ஸ்டாலின்- காரணம் என்ன.?
Embed widget