மேலும் அறிய

Crime: மிஸ்ட் கால் மூலம் வளர்ந்த காதல்.. மனைவி எடுத்த முடிவு.. கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு..

சென்னையில் கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை லாரி டிரைவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் கணவன் மற்றும் மகன்களை உதறிவிட்டு வந்த பெண்ணை லாரி டிரைவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்கு 32 வயதான நதியா என்ற மனைவியும், 2 மகன்களும் இருந்துள்ளனர். அதேபோல், திருவண்ணாமலை அருகே கண்ணக்குருக்கை பகுதியை சேர்ந்தவர் 36 வயதான தங்கராஜ். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கும் திருமணமாகி 3 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளது. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராஜின் செல்போன் எண்ணில் இருந்து தவறுதலாக நதியாவின் செல்போனுக்கு கால் வந்துள்ளது. அதிலிருந்து நதியா மற்றும் தங்கராஜ் நட்பாக பழகிய நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. 

தங்கராஜ் சென்னைக்கு லாரி ஓட்டி வரும்போது நதியாவை சந்தித்து தனியாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் நதியாவின் கணவருக்கு தெரியவர, தங்கராஜ் உடன் ஏற்பட்ட பழக்கத்தை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இப்படி நாள்தோறும் சண்டை வளர, நேற்று முன்தினம் இரவு நதியா அவரது கணவர் மற்றும் 2 மகன்களை விட்டுவிட்டு தங்கராஜ் முக்கியமென கிளம்பி திருவண்ணாமலை சென்றுள்ளார். இதை எதையும் எதிர்பார்க்காத தங்கராஜ், நதியாவை தன் வீட்டிற்கு முன்பு கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

அப்போது நதியா தங்கராஜிடம், நான் இனிமேல் உன்னோடு தான் வாழ போகிறேன் என தெரிவித்துள்ளார். கணவர் வேறொரு பெண்ணுடன் வீட்டுக்கு வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த தங்கராஜின் மனைவி ரேகா, இருவரையும் உள்ளே அனுமதிக்காமல் சண்டையிட்டு விரட்டியடித்துள்ளார். 

அதைத்தொடர்ந்து, தங்கராஜிம் நதியாவும் பெரியகோலாப்பாடி கிராமத்தில் உள்ள முருகர் கோயில் பகுதிக்கு சென்றனர். அங்கு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு அழைத்து செல்லாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என நதியா மிரட்டியுள்ளார். அதனால், ஆத்திரம் அடைந்த தங்கராஜ், அவர் கட்டியிருந்த சேலையால் கழுத்தை நெரித்து நதியாவை கொலை செய்துள்ளார். அப்போது, கிராம மக்கள் வருவதை பார்த்து, மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதைப்பார்த்த அங்கு வந்த பொது மக்கள் அவரை பிடித்து காவல்துரையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget