மேலும் அறிய

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார்

சென்னை கொடுங்கையூர் சின்னான்டி மடம் பகுதியை சேர்ந்தவர் மணி (29). இவர் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அதனை திருப்பி சரிவர கொடுக்க முடியாததால் அடிக்கடி வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மணியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து வந்த நபர் ஒருவர் மணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கடனை கட்ட முடியுமா முடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அவமானம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாதபோது தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணியின் மனைவி ஸ்டெல்லா மேரி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் எனது கணவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதற்கு காரணமான வங்கி மற்றும் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரிடம் தகராறில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
போதை பொருள் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 12ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை விற்பனை செய்த இரண்டு பேர் மற்றும் அதனை வாங்க வந்த மூன்று பேர் என 5 பேரை பிடித்து புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டேரி தசாமகான்  அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜிசுல்லா (25) என்ற நபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
 

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
 
இவரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை இளைஞர்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அஜிசுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget