மேலும் அறிய

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார்

சென்னை கொடுங்கையூர் சின்னான்டி மடம் பகுதியை சேர்ந்தவர் மணி (29). இவர் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அதனை திருப்பி சரிவர கொடுக்க முடியாததால் அடிக்கடி வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மணியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து வந்த நபர் ஒருவர் மணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கடனை கட்ட முடியுமா முடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அவமானம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாதபோது தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணியின் மனைவி ஸ்டெல்லா மேரி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் எனது கணவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதற்கு காரணமான வங்கி மற்றும் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரிடம் தகராறில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
போதை பொருள் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 12ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை விற்பனை செய்த இரண்டு பேர் மற்றும் அதனை வாங்க வந்த மூன்று பேர் என 5 பேரை பிடித்து புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டேரி தசாமகான்  அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜிசுல்லா (25) என்ற நபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
 

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
 
இவரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை இளைஞர்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அஜிசுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget