மேலும் அறிய

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார்

சென்னை கொடுங்கையூர் சின்னான்டி மடம் பகுதியை சேர்ந்தவர் மணி (29). இவர் மினி வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஸ்டெல்லா மேரி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகன் மற்றும் ஒரு வயதில் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக மணி தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில் அதனை திருப்பி சரிவர கொடுக்க முடியாததால் அடிக்கடி வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மணியிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வங்கியில் இருந்து வந்த நபர் ஒருவர் மணியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கடனை கட்ட முடியுமா முடியாதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது வீட்டில் இருந்த உறவினர்களுக்கும் மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அவமானம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாதபோது தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணியின் மனைவி ஸ்டெல்லா மேரி கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் எனது கணவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். அதற்கு காரணமான வங்கி மற்றும் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரிடம் தகராறில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 
போதை பொருள் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது
 
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கடந்த 12ஆம் தேதி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் எனும் போதைப் பொருளை விற்பனை செய்த இரண்டு பேர் மற்றும் அதனை வாங்க வந்த மூன்று பேர் என 5 பேரை பிடித்து புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டேரி தசாமகான்  அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த அஜிசுல்லா (25) என்ற நபர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
 

தனியார் வங்கி ஊழியர்கள் ஆபாச வார்த்தையில் திட்டியதால் ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை
 
இவரை புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை இளைஞர்களுக்கு விற்றதை ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அஜிசுல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget