மேலும் அறிய

தலைக்கேறிய போதை! கோயம்பேட்டில் மகன்களை தொலைத்துவிட்டு செல்போனைத் தேடிய அப்பா!

கோயம்பேட்டில் மது குடிக்க சென்ற தந்தை, தனது பிள்ளைகளை தவற விட்டு விட்டு, செல்போனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் 42 வயதான முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளநிலையில், நேற்று கோயம்பேடு நிலையத்திற்கு இரண்டு மகன்களுடன் வந்த முருகன் அவர்களை பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரத்தில் உட்கார வைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். 

நீண்ட நேரமாகியும் தந்தை வராததால் மகன்கள் இருவரும் செய்வதறியாது கதறி அழுது கொண்டிருந்தனர். இதைகண்ட அப்பகுதி மக்கள், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலிருந்து வந்த இன்ஸ்பெக்டர் குணசேகரன், இரண்டு , சிறுவர்களையும் மீட்டு கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். பிறகு அந்த சிறுவர்களுக்கு மதிய உணவு மற்றும் பிஸ்கட் வாங்கி கொடுத்து காவல் நிலையத்தில் அமர வைத்துள்ளனர். 

பின்னர், கோயம்பேடு காவல்துறையினர் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது, இரண்டு சிறுவர்களை அமர வைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்கு முருகன் செல்வது தெரியவந்துள்ளது. சிறுவர்களின் பெற்றோர் குறித்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக வந்தனர்.பின்னர், குடிபோதையில் ஒரு நபர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்து தனது செல்போனை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

அப்போது, மீட்கப்பட்டு காவல் நிலையத்தில் உட்கார வைக்கப்பட்டு இருந்த சிறுவர்கள் தனது தந்தையை பார்த்து அழுது கொண்டே ஓடி வந்துள்ளனர். இதை கண்டு போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குடிபோதையில் இருந்த முருகன், தனது பிள்ளைகளை கட்டிப்பிடித்து அழுதார்.

போலீசார் முருகனிடம் விசாரித்தபோது, “மதுகுடிக்க சென்றபோது பிள்ளைகளை விட்டு சென்றேன். போதையில் பிள்ளைகளை அழைத்து வந்ததை மறந்து விட்டேன். சிறிது நேரம் கழித்துதான் விட்டு சென்ற இடத் தில் பிள்ளைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்தால் போலீசார் திட்டுவார்கள் என பயந்து செல்போனை காணவில்லை புகார் அளிக்க வந்தேன்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து கோயம்பேடு போலீசார் முருகனை கடுமையாக எச்சரித்து அவருடன் இரண்டு பிள்ளைகளை அனுப்பி வைத்தனர். மதுகுடிக்க வந்த நபர் தனது பிள்ளைகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget