மேலும் அறிய

எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொண்டு கணவனை கொலை செய்த மனைவியை கைது செய்தனர்.

சில மனித எலும்பு கூடு
 
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் ஏரியின் அருகில் உள்ள நில பகுதியில் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. அந்த பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற சில மனித எலும்பு கூடு சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் சிதறி கிடந்த எலும்புகளை சேகரித்து மனித எலும்புகள்தான் என்று உறுதி செய்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!
 
மனித தலை மார்பக எலும்பு 
 
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் விசாரணை மேற்கொண்டார். மனித எலும்புகளை சேகரிக்கும்போது அந்த பகுதி அருகில் உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 2 அடி பள்ளத்தில் மண்டை ஓடு ஒரு பக்கவாட்டில் நொறுங்கிய நிலையிலும் , மனித தலை மார்பக எலும்பு உள்ளிட்ட உடல் பாக எலும்புகள் மற்றும் துணிகள் கிடந்ததை கண்ட போலீசார் டாக்டர் உதவியுடன் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
கள்ளக் காதலன்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்  சம்பவம் நடந்த  வெள்ளப் பந்தல் கிராமத்தில் ஒரு வயல் வெளி பம்ப் செட்டில் தங்கியிருந்த  குடும்பத்தினர் சில தினங்களாக காணவில்லை, என்று பொது மக்கள் கொடுத்த தகவலையடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் யார் என்று திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தேடி கண்டு பிடித்தனர். அப்போது சித்ரா ( வயது 26) என்ற பெண்ணை அழைத்து வந்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் தானும், கள்ளக் காதலன் சக்திவேல் என்பவரும் சேர்ந்து கணவர் சந்திரனை என்ற குமாரை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். 
 

எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!
 
மேலும் சித்ரா  போலீசில் தெரிவித்ததாவது, திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரன் என்ற குமார் ( வயது 35)  என்பவருக்கும், கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த  எனக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணமாகி இரண்டு வயதில் நாகராஜ் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில்,  நாங்கள் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப் பந்தல் கிராமத்தை சேர்ந்த துரைபாபு என்பவரின், வயல் வெளியைப் பார்த்துக் கொண்டு அங்கேயே பம்ப் செட்டில் தங்கியிருந்தோம். இந்நிலையில்  செங்கல்பட்டை அடுத்த மையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
 
கடந்த மாதம் எனது கணவர் சந்திரன் வெளியில் சென்றிருந்த போது சக்திவேல் வெள்ளப் பந்தல் கிராமத்திற்கு வந்தார். அப்போது நானும் சக்திவேலும் தனிமையில் இருந்தோம். இந்நிலையில் திடீரென அங்கு வந்த கணவர் சந்திரன் எங்களை பார்த்து விட்டு எங்களை அடித்தார். உடனே நானும் கள்ளக் காதலன் சக்திவேலும் சேர்ந்து சந்திரன் தலையில் கட்டையால், தாக்கி கொலை செய்து விட்டு அருகில் உள்ள ஏரிப் பகுதியில் புதைத்து விட்டு தப்பி சென்றோம் என்று தெரிவித்தார். சந்திரனை கொலை செய்த சித்ரா மற்றும் சக்திவேலை கைது செய்த போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம், ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். மேலும்  எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்து  கைது செய்த போலீசாரை  பொதுமக்கள்  வெகுவாக பாராட்டினர்
எலும்புக்கூடை வைத்து துப்பு..! கள்ளக்காதலால் நடந்த கொலையை கச்சிதமாக கண்டுபிடித்த காவல்துறை..!

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
போதைப் பொருள் தடுப்பு பிரிவு எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு !! தப்பியோடிய ரவுடிக்கு வலைவீச்சு
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
" கூடவே இருந்து இப்படி பண்ணிட்டாளே " தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Embed widget