மேலும் அறிய

கலெக்டர் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு... கைவரிசை காட்ட நினைத்த ராஜஸ்தான் மாணவன்! சிக்கியது எப்படி?

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு தொடங்கி வடமாநில பள்ளி மாணவனை கைது செய்தது செங்கல்பட்டு காவல்துறை.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ராகுல் நாத் பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு, முன்பு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி,  செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியரின் நண்பர்களிடம் பணம்  கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்களுடைய நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தன்னுடைய பெயரில், போலி கணக்கு ஒன்றை துவங்கி தன்னுடைய நண்பர்களிடம், பணம் கேட்கிறார்கள் என செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் சம்பந்தப்பட்ட போலி கணக்கில் லிங்க் மற்றும்  ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவற்றை பகிர்ந்தார்.


கலெக்டர் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு... கைவரிசை காட்ட நினைத்த ராஜஸ்தான் மாணவன்! சிக்கியது எப்படி?
இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல்துறையினர் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் தலைமையில், காவலர்கள்  சுதாகர், குருநாதர், சங்கர் ,சிவா, கலைவாணன், ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் போலி கணக்கை பயன்படுத்திய நபரின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.


கலெக்டர் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு... கைவரிசை காட்ட நினைத்த ராஜஸ்தான் மாணவன்! சிக்கியது எப்படி?

 

காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததால், காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநிலம் சென்று முகமத் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரை கைது செய்தனர். இச்செயலில் ஈடுபட்டவர் சிறுவர் என்பதும், பத்தாம் வகுப்பு படித்து வருவதும் காவல்துறை நடந்த விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பரத்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று செங்கல்பட்டு மாவட்ட குழுமத்திலும் ஆஜர்படுத்தியும் செங்கல்பட்டு கூர் நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்த காவல் இருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.


கலெக்டர் பெயரில் ஃபேஸ்புக் கணக்கு... கைவரிசை காட்ட நினைத்த ராஜஸ்தான் மாணவன்! சிக்கியது எப்படி?

இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம். இதுபோல் எவரேனும் ஃபேஸ்புக், மெசஞ்சர் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கூகுளே, அல்லது வேறு . ஏதாவது இணையதளம் மூலம் மிகவும் அவசரம் என பணம் கேட்டால் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget