மேலும் அறிய

Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது

சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கில் மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது செய்து அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த மூன்று கள்ளத் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவை சேர்ந்த கல்யாணம் என்பவரின் மகன் 27 வயதான கனிவண்ணன். இவர் கேட்டரிங் படித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் மீண்டும் ஊர் திரும்பி சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2 -ஆம் தேதி இரவு சட்டநாதபுரம் உப்பனாறு கரையில் கனிவண்ணன் தலையில் நெற்றி பொட்டில் துளை போட்ட காயத்துடன் ரத்த வெள்ளத்தில் தனது இருசக்கர வாகனதுடன் இறந்து கிடந்துள்ளார். இவர் இறந்து கிடப்பதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.


Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது

தகவலை அடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சீர்காழி காவல்துறையினர், கனிவண்ணனின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கனிவண்ணன் தூப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தடயங்கள் தென்பட, கனிவண்ணன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொள்ளப்பட்டதை உறுதிபடுத்தினர். மேலும், தடய அறிவியல் சோதனைக்காக கனிவண்ணின் உடலை சீர்காழி அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்தனர்.


Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகை எஸ்.பி‌. ஜவகர் மேற்பார்வையில், மூன்று துணை காவல் கண்காணிப்பாளர்கள், 8 ஆய்வாளர்கள், 11 உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகளை அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கனிவண்ணனின் உடல் தடய அறிவியல் பிரேதப் பரிசோதனை நடந்து முடிந்த நிலையில், கொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் குடும்பத்தினர் தெரிவித்ததால் கனிவண்ணன் உடல் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.


Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கனிவண்ணனின் செல்போனுக்கு வந்த கால் நம்பர்களை போலீசார் தீவிர ஆய்வு செய்தனர். இந்நிலையில், இவரும் தென்பாதி ஆர்விஎஸ் நகரை சேர்ந்த விசாகப்பட்டினம் மத்திய துணை ராணுவ படையில் பணியாற்றி வரும் 50 வயதான தேவேந்திரன்  ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக குடும்ப நண்பராக பழகி வந்துள்ளார். இந்த சூழலில் கடந்த 2 தேதி இரவு சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் உப்பனாற்றாங்கரையில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது தேவேந்திரன் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியால் கனிவண்ணனை நெற்றி பொட்டில் சுட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கணிவண்ணன் உயிரிழந்துள்ளார்.


Crime: சீர்காழி சமையல் கலைஞர் கொலை வழக்கு: மத்திய துணை ராணுவ படை  வீரர் கைது

இந்த வழக்கில் கனிவண்ணின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மத்திய துணை ராணுவ படை வீரர் ஒருவரின் அழைப்பு கடைசியாக வந்துள்ளதை போலீசார் உறுதி செய்து தேவேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கணிவண்ணை சுட்டுக் கொன்றதாக மத்திய துணை ராணுவ படை வீரர் தேவேந்திரன் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தென்பாதி ஆர்விஎஸ் நகரில் உள்ள அவர்கள் வீட்டில் இருந்து இரண்டு துப்பாக்கியும், சொந்த கிராமமான வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தில் இருந்து ஒரு துப்பாக்கியும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தேவேந்திரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இந்த மூன்று துப்பாக்கிகளும் கள்ளத்துப்பாக்கி என்பதும், ஒரு துப்பாக்கி 19 ரவுண்ட் சுடக்கூடிய 9எம்எம் துப்பாக்கி என்பதும், மற்றொன்று பறவைகள் வேட்டையக்கூடிய ஏர் கன் துப்பாக்கி என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு " – போட்டோ அனுப்பி மிரட்டிய இன்ஸ்டா காதலன்
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
விவசாயிகளின் பாக்கெட்டுகளில் இருந்து சட்டென வெளிவந்த கருப்புத் துணிகள்! ஆட்சியர் கண்முன்பு  அதிர்ச்சி சம்பவம்...
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget