மேலும் அறிய

“நாம சேர்ந்து செத்துருவோம்” .. சாகும் நேரத்தில் எஸ்கேப் ஆன காதலன்.. இளம்பெண் கொலை!

வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் அது திட்டமிட்ட கொலை என தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி 24ம் தேதி அங்குள்ள பட்டறை ஒன்றில்  இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எலத்தூர் போலீசார் உள்ளிட்ட அனைவரும் இதனை தற்கொலை என நினைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக் கூட அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தியது. 

ஆனால் அப்பெண் வீட்டில் இருந்து ஏன் இந்த பட்டறையில் வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி போலீசாருக்கு வலுத்தது. சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளரான வைஷாகானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது அடிக்கடி அந்த பெண் வைஷாகான் பட்டறைக்கு வந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தற்கொலை விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது என நினைத்த போலீசார் அவரை துருவி துருவி விசாரணை செய்ததில் உண்மை வெளிப்பட்டது. அதாவது வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அந்த பெண் கேட்டபோது காதலிப்பதாக கூறியுள்ளார்.  அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

அப்படியாக காதல் ஆசை காட்டி பலமுறை அந்த பெண்ணை வைஷாகான் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வைஷாகானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. எனினும் அந்த பெண் தன்னையும் திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் வைஷாகான் மறுக்கவே இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பெண் தங்களுக்கிடையேயான உறவை தனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என நினைத்த வைஷாகான் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தன்னால் உன்னை திருமணம் செய்துக் கொண்டு வாழ முடியாது. அதனால் சேர்ந்து சாகலாம் என கூறி ஜனவரி 24ம் தேதி பட்டறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தூக்கு மாட்ட முடிவு செய்துள்ளனர். இரண்டு ஸ்டூல் போடப்பட்டு அந்த பெண் ஏறி தனது கழுத்தில் கயிறை மாட்டி இறுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வைஷாகான் மற்றொரு ஸ்டூலில் ஏறாமல் அந்த பெண் இருந்த ஸ்டூலை தட்டி விட அப்பெண் துடிதுடித்து இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதற்கிடையில் வைஷாகான் மீது கொலை வழக்கோடு, போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
Embed widget