மேலும் அறிய

“நாம சேர்ந்து செத்துருவோம்” .. சாகும் நேரத்தில் எஸ்கேப் ஆன காதலன்.. இளம்பெண் கொலை!

வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக பதியப்பட்ட வழக்கின் விசாரணை முடிவில் அது திட்டமிட்ட கொலை என தெரிய வந்துள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள எலத்தூரில் தான் இந்த கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஜனவரி 24ம் தேதி அங்குள்ள பட்டறை ஒன்றில்  இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த எலத்தூர் போலீசார் உள்ளிட்ட அனைவரும் இதனை தற்கொலை என நினைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கைக் கூட அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதிப்படுத்தியது. 

ஆனால் அப்பெண் வீட்டில் இருந்து ஏன் இந்த பட்டறையில் வந்து தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி போலீசாருக்கு வலுத்தது. சம்பந்தப்பட்ட பட்டறை உரிமையாளரான வைஷாகானிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்க போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அப்போது அடிக்கடி அந்த பெண் வைஷாகான் பட்டறைக்கு வந்து செல்லும் காட்சிகள் இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தற்கொலை விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது என நினைத்த போலீசார் அவரை துருவி துருவி விசாரணை செய்ததில் உண்மை வெளிப்பட்டது. அதாவது வைஷாகானுக்கும், அந்த பெண்ணும் நீண்ட காலம் அறிமுகம் இருந்துள்ளது. சிறு வயதில் இருந்து வைஷாகான் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அந்த பெண் கேட்டபோது காதலிப்பதாக கூறியுள்ளார்.  அதனை சிறு வயதிலேயே அப்பெண்ணும் நம்பியுள்ளார். 

அப்படியாக காதல் ஆசை காட்டி பலமுறை அந்த பெண்ணை வைஷாகான் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் வைஷாகானுக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. எனினும் அந்த பெண் தன்னையும் திருமணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் வைஷாகான் மறுக்கவே இருவருக்குமிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பெண் தங்களுக்கிடையேயான உறவை தனது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் கூறினால் தனது வாழ்க்கை பாழாகிவிடும் என நினைத்த வைஷாகான் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தன்னால் உன்னை திருமணம் செய்துக் கொண்டு வாழ முடியாது. அதனால் சேர்ந்து சாகலாம் என கூறி ஜனவரி 24ம் தேதி பட்டறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தூக்கு மாட்ட முடிவு செய்துள்ளனர். இரண்டு ஸ்டூல் போடப்பட்டு அந்த பெண் ஏறி தனது கழுத்தில் கயிறை மாட்டி இறுக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வைஷாகான் மற்றொரு ஸ்டூலில் ஏறாமல் அந்த பெண் இருந்த ஸ்டூலை தட்டி விட அப்பெண் துடிதுடித்து இறந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. 

இதற்கிடையில் வைஷாகான் மீது கொலை வழக்கோடு, போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
குழந்தை இல்லாததால் சண்டை.. மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Cluster Bomb Attack: முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
முதல் முறையாக கொத்து குண்டு ஏவுகணையை வீசிய ஈரான்; அதிர்ச்சியில் இஸ்ரேல்; பின்னணியில் யார்.?
Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்
Congress Rajya Sabha candidate : காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
காங்கிரஸ் ராஜ்யசபா வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்.! யார் இவர்.? எந்த ஊரை சேர்ந்தவர்.?
Who Killed Khamenei.?: ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
ட்ரம்ப் சார், பொய் சொல்லைன்னா தூக்கம் வராதே.! கமேனியை கொன்றது யார்.? போட்டுடைத்த பென்டகன் அதிகாரி
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
DMK - Congress: நாங்க மகிழ்ச்சியா இல்ல.. தியாகம் பண்றோம் அவ்வளவு தான்.. காங்கிரஸ் தலைவர் ஆதங்கம்!
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
AIADMK: யப்பா முடியலடா.. அதிமுகவில் இருந்து மீண்டும் ஒரு புது கட்சி.. என்ன தெரியுமா?
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
Salem: தேர்தல் சீசன் வந்தா போதும்.. பேரம் பேசும் பிரேமலதா.. விளாசிய விந்தியா!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
Embed widget