மேலும் அறிய

திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளர் கையை முறித்து, கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் 

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கும் வேலைகள் நடப்பதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், கிராம உதவியாளர் நெடுஞ்செழியன், செல்வி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கூரை அமைக்க போடப்பட்டிருந்த மரம் உள்ளிட்டவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் உள்ளிட்ட இருவரும் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற வருவாய் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் பேகத்தின் கையை முறித்து செல்போனை உடைத்து  அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இவர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு கழுத்து மற்றும் வாய் பகுதியில் பலமாக அடிபட்டுள்ளது. மேலும் உதவியாளர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களையும் உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர். துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்கி தகாத வார்த்தையால் பேசிய ரகுநாதன் மற்றும் சக்திவேல் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. மேலும் அரசு அலுவலர்களை தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, “நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த வருவாய் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மாவட்ட காவல்துறை சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்” என எச்சரித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கோவை கல்லூரி மாணவி பலியல் வன்கொடுமை வழக்கு...  மார்ச் 7-ல் தீர்ப்பு
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்காதல் கோபம் கொலையாக மாறியது – மனைவியை குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
கணவன் - மனைவி கருத்து வேறுபாடு !! திருமணத்தை மீறிய பெண்ணின் உறவு !! திடீரென நேர்ந்த சோகம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Embed widget