மேலும் அறிய

திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளர் கையை முறித்து, கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் 

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கும் வேலைகள் நடப்பதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், கிராம உதவியாளர் நெடுஞ்செழியன், செல்வி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கூரை அமைக்க போடப்பட்டிருந்த மரம் உள்ளிட்டவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் உள்ளிட்ட இருவரும் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற வருவாய் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் பேகத்தின் கையை முறித்து செல்போனை உடைத்து  அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இவர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு கழுத்து மற்றும் வாய் பகுதியில் பலமாக அடிபட்டுள்ளது. மேலும் உதவியாளர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களையும் உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர். துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்கி தகாத வார்த்தையால் பேசிய ரகுநாதன் மற்றும் சக்திவேல் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. மேலும் அரசு அலுவலர்களை தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, “நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த வருவாய் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மாவட்ட காவல்துறை சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்” என எச்சரித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget