மேலும் அறிய

திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற பெண் வருவாய் ஆய்வாளர் கையை முறித்து, கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பாஜக பிரமுகர் உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் 

திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில், ஆக்கிரமிப்பு செய்து கடை அமைக்கும் வேலைகள் நடப்பதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார், கிராம உதவியாளர் நெடுஞ்செழியன், செல்வி உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கூரை அமைக்க போடப்பட்டிருந்த மரம் உள்ளிட்டவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த புதுமல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ரகுநாதன், சக்திவேல் உள்ளிட்ட இருவரும் ஆக்கிரமிப்பு அகற்ற முயன்ற வருவாய் அலுவலர்களை தடுத்து நிறுத்தி ஒருமையில் பேசியதோடு மட்டுமின்றி உருட்டுக் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்த பெண் வருவாய் ஆய்வாளர் பேகத்தின் கையை முறித்து செல்போனை உடைத்து  அங்கிருந்து தப்பிச் சென்றனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இவர்கள் தாக்கியதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாருக்கு கழுத்து மற்றும் வாய் பகுதியில் பலமாக அடிபட்டுள்ளது. மேலும் உதவியாளர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டவர்களையும் உருட்டுக்கட்டை உள்ளிட்டவைகளை கொண்டு தாக்கியுள்ளனர். துரிஞ்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசு ஊழியர்களை பணிசெய்ய விடாமல் தடுத்து தாக்கி தகாத வார்த்தையால் பேசிய ரகுநாதன் மற்றும் சக்திவேல் உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜிபேகம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கோட்டாட்சியர் வெற்றிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாகியுள்ளது. மேலும் அரசு அலுவலர்களை தாக்கியவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


திருவண்ணாமலை | ஏரிக்கரை ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல் : பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, “நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து கொட்டகை அமைக்க முயன்றவர்களை தடுத்த வருவாய் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும், மாவட்ட காவல்துறை சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும்” என எச்சரித்தார்.

தலைப்பு செய்திகள்

" கணவரைப் பற்றி பேசனும் " தனியாக வரவழைத்து அத்துமீறல் - சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
Pune Murder Case: புனே கொடூரம்: ஹுடியால் சிக்கிக் கொண்ட கொலையாளி? 20 வயது பெண்ணின் கொடூர ஸ்கெட்ச்!
PUNE MURDER : நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
நம்பி சென்ற மாப்பிள்ளை.! 400 அடி பள்ளத்தில் தள்ளிய வருங்கால மனைவி- மலை உச்சியில் கொடூரம்- நடந்தது என்ன.?
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு
சொந்த குழந்தையை கொன்ற தாய்... 14 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget