மேலும் அறிய

கதறி அழுத பிரியாணி அபிராமி.. சாகும் வரை சிறை.. டென்ஷனான நீதிபதி - நடந்தது என்ன?

Biryani Abirami "காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கில் நீதிபதி,  இருவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்"

சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சார்ந்தவர் விஜய். இவரது மனைவி அபிராமி. தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.

இருவருடைய திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், பிரியாணி வாங்குவதில் அபிராமிக்கும் பிரியாணி கடையை சேர்ந்த, ஊழியர் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருடைய நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

உல்லாசமாக இருக்க குழந்தைகளை கொலை செய்த அபிராமி

இதுகுறித்து அபிராமி குடும்பத்தினருக்கு தெரிய வரவே, "உனக்கு திருமணம் நடைபெற்று விட்டது, குழந்தைகளும் இருக்கிறார்கள் இது போன்ற தவறான பாதைக்கு செல்லாதே" என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரம் இருவரும் குழந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரையும் கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பிச் செல்ல முடிவெடுத்தனர்.

செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு, பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, குழந்தைகள் இருவரையும் அபிராமி கொலை செய்தார். இது தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அபிராமி கேரளாவிற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்தபோது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

இது தொடர்பான வழக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு காஞ்சிபுரத்தில் மகிளா நீதிமன்றம் துவங்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து வழக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

ஆய்வாளரை கண்டித்த நீதிபதி 

குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் உரிய நேரத்தில்  ஆஜர் படுத்தாததால், குன்றத்தூர் ஆய்வாளர் மீது நீதிபதி செம்மல் கண்டனம் தெரிவித்தார். ஆய்வாளர் மீது 174,175,176 ஆகிய  3 பிரிவின் கீழ் கடமையை செய்யாதது, கடமையை மீறுதல் உள்ளிட்ட வழக்குக்கு பதில் அளிக்க கோரி நீதிபதி செம்மல் தெரிவித்த நிலையில்,  ஆய்வாளர் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தெரிவித்தார்‌‌. இதனை அடுத்து, நீதிபதி இது போன்ற காரணங்களை இனி தெரிவிக்க கூடாது, முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று எச்சரித்தார். 

பிறகு தீர்ப்பினை வழங்க தொடங்கினார். அபிராமி மற்றும் காதலன் மீனாட்சிசுந்தரம் இருவரும் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். ஏற்கனவே ஏழு ஆண்டுகள் சிறையில் இருப்பதால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு அபிராமி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரும் கோரிக்கை வைத்தனர். 

காவலர்களை கண்டித்த நீதிபதி 

நீதிமன்றம் வளாகத்திற்கு வந்திருந்த அபிராமி துப்பட்டாவால் முகத்தை மூடி அழித்துவரப்பட்டார். ஏன் குற்றவாளிக்கு துப்பட்டாவை வழங்கினார்கள் என காவலர்களை பார்த்து நீதிபதி கோபத்துடன் கேள்வி எழுப்பினார். துப்பட்டாவால் கழுத்தை நெரித்து தற்கொலை செய்ய நேரிடும், இதனை அனுமதிக்க கூடாது என காவலர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுத அபிராமி 

இருவரும் சேர்ந்து செய்த குற்றத்தை வைத்து பார்க்கும்போது, இருவருக்கும் ஆயுள் தண்டனை மட்டும் வழங்கினால் போதுமானதாக இல்லை என நீதிபதி கருத்து தெரிவித்தார். இருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் வாழ்நாள் வரை சிறை தண்டனை என்ற தீர்ப்பை அறிவித்தார். 

இறுதி மூச்சு உள்ளவரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததை ஒட்டி அபிராமி நீதிமன்ற வளாகத்தில் கதறி அழுதார். அதேபோன்று கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரமும் அழுத காட்சிகளை பார்க்க முடிந்தது. குழந்தைகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான தீர்ப்பு வெளியாகிய நிலையில், காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!
" எவன் கூட வாழப் போற " வேலை முடிந்து வந்த மனைவியுடன் தகராறு !! நடந்தது என்ன ?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: “தவெக-வை ஆட்சி அமைக்க விடுங்கள்“; திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பரபரப்பு பேட்டி
“தவெக-வை ஆட்சி அமைக்க விடுங்கள்“; திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பரபரப்பு பேட்டி
DMK AIADMK Alliance: ’’நாங்க மெயின் எதிரிகள்; திமுக- அதிமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை’’ டிகேஎஸ் இளங்கோவன் உச்சகட்ட ட்விஸ்ட்!
DMK AIADMK Alliance: ’’நாங்க மெயின் எதிரிகள்; திமுக- அதிமுக கூட்டணிக்கு சாத்தியமே இல்லை’’ டிகேஎஸ் இளங்கோவன் உச்சகட்ட ட்விஸ்ட்!
AIADMK: அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.! இபிஎஸ் முதலமைச்சர் ஆவார்.. அடித்துச் சொல்லும் தம்பிதுரை
அதிமுக மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும்.! இபிஎஸ் முதலமைச்சர் ஆவார்.. அடித்துச் சொல்லும் தம்பிதுரை
TN 12th Result District Wise: பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்து அசத்திய ஈரோடு மாவட்டம்; இத்தனை சதவீதம் தேர்ச்சியா.?
TN 12th Result Centums: கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
கணினி அறிவியல்ல இத்தனை ஆயிரம் பேர் 100 க்கு 100-ஆ.?! எந்தெந்த பாடங்களில் எவ்வளவு பேர் தெரியுமா.?
GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
12th Supplementary Exam Date: 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? .. துணைத்தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!
12th Supplementary Exam Date: 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியா? .. துணைத்தேர்வு தேதி, விண்ணப்பிக்கும் நாள் அறிவிப்பு!
TN 12th Result 2026: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி!
TN 12th Result 2026: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி!
Embed widget