மேலும் அறிய

Crime : பூஜைக்காக வைக்கப்பட்ட ஆப்பிளை சாப்பிட்ட 6 வயது சிறுவன் அடித்துக்கொலை.. பீஹாரில் பயங்கரம்..

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுவன் விவேக், தனது பள்ளியில் துர்கா பூஜைக்காக ஆப்பிளை சாப்பிட்டதற்காக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் கயாவில் உள்ள பாக்கி பிகா கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ன்றாம் வகுப்பு படித்து வந்த 6 வயதான விவேக் என்ற  சிறுவன் படித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய் கிழமை பள்ளி வளாகத்தில் துர்கா தெய்வத்திற்கான பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது பூஜை தட்டில் இருந்த ஆப்பிள் ஒன்றை விவேக் எடுத்து சாப்பிட்டுள்ளார். 

இதைகண்டு கோவமடைந்த அப்பள்ளியின் ஆசிரியர் விவேக் சிங் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து விவேக்கை ஒரு அறைக்கு அழைத்துசென்று, பூஜைக்காக வைத்திருந்த பழத்தை ஏன் சாப்பிட்டாய் என்று கேட்டு அந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இருவரும் சேர்ந்து அடித்ததால் அந்த சிறுவன் நிலைகுலைந்து போனார். தொடர்ந்து சிறுவனில் நெஞ்சில் எட்டி உதைத்து, வெளியில் வீசியதாகவும் கூறப்படுகிறது. விவேக் அரை மயக்கத்தில் கிடந்ததை பார்த்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், சிறுவனை தூக்கி அவரது வீட்டில் கொண்டுபோய் சேர்த்துள்ளார். 

அந்தநேரத்தில், விவேக்கில் நிலைமை மோசமானதை கண்டு குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளியை நடத்தி வந்த தம்பதியை கயா காவல்துறையினர் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட குழந்தை விவேக்கின் தாத்தா ராம் பாலக் பிரசாத் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: ”பள்ளி வளாகத்திற்குள் துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேஜையில் சில பழங்கள் இருந்தன, அப்போது என் பேரன் விவேக் அதிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து சாப்பிட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளியின் உரிமையாளர்கள் விவேக்கை ஒரு அறையில் வைத்து கொடூரமாகத் தாக்கினர். உடல்ரீதியான தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் அவரை வளாகத்திற்கு வெளியே தூக்கி எறிந்தனர்.

என் பேரன் பள்ளி வாயிலுக்கு வெளியே சுயநினைவின்றி கிடந்தான். என் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விவேக் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து, வசீர்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட உக்ரா கிராமத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், நாங்கள் உடனடியாக அவரை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரது உடல்நிலையைப் பார்த்து, மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை மகத் மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைத்தனர். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் விவேக் உயிரிழந்தார். விவேக்கை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, தனது நேர்ந்த கொடுமை குறித்து என்னிடம் சொன்னார். அதில், விகாஸ் சிங்கும் அவரது மனைவியும் தன்னை மார்பில் தாக்கியதாக தெரிவித்தார். 

இது குறித்து வசீர்கஞ்ச் மாவட்ட எஸ்.ஹெச்.ஓ ராம் எக்பால் யாதவ் கூறியதாவது: ”நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். மாணவர் விவேக் தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், அங்கு விடுதியில் தங்கி இருப்பதாகவும் இறந்தவரின் குடும்பத்தினர் கூறினர். அவர் கொடூரமாக தாக்கப்பட்டார். பள்ளியின் உரிமையாளர்களான விகாஸ் சிங் அவரது மனைவியால் பாதிக்கப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார். சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

பிரேதப் பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்று தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

" அவள் எனக்கு மட்டும் தான் " திருமணமான பெண்ணுக்காக பெயிண்டர் அடித்துக் கொலை
" பழையதை மறந்து வாழலாம் " என அழைத்துச் சென்று மனைவியை எரித்துக் கொன்ற கணவன்
" புதிய போட்டோ ஷூட் " என அழைத்து கொலை !! இன்ஸ்டாகிராம் காதலால் நடந்த கொடூரம்
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget