மேலும் அறிய

Bengaluru Suicide Case: மனைவி, மாமியார் தந்த மன உளைச்சல்! தூக்கில் தொங்கிய ஐடி ஊழியர் - வேதனை

மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தந்த மன உளைச்சலால் ஐடி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பங்களுக்குள் நடக்கும் மன உளைச்சல் மற்றும் கொடுமைகளால் நடக்கும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மன உளைச்சல் இருந்து வந்தது போல, சமீபகாலமாகவே மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினரால் கணவன்மார்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறது. பெங்களூரில் தற்போது அப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

மனைவியால் மன உளைச்சல்:

பீகாரைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். பீகாரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிகிதா சிங்கானி. இவருக்கும், இவரது மனைவிக்கும் குழந்தை உள்ள நிலையில், சில காலங்களுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

2019ம் ஆண்டு திருமணம் அதுல் சுபாஷை திருமணம் செய்து கொண்ட நிகிதா அவரை விவகாரத்து செய்த பிறகு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை என 9 வழக்குகளை அவர் மீது பதிவு செய்திருந்தார்.  இந்த வழக்குகளை உத்தரபிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் நிகிதா தொடர்ந்திருந்தார்.  

3 கோடி கேட்டு டார்ச்சர்:

மனைவி விவகாரத்திற்கு பிறகும், மனைவி தொடர்ந்த வழக்கிற்கும் பிறகும் அதுல் சுபாஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த வழக்கிற்காக அவர் உத்தரபிரதேசத்திற்கும், பெங்களூருக்கும் அடிக்கடி பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளார். அப்போது, அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினர் இந்த வழக்கை முடித்துக் கொள்ள ரூபாய் 3 கோடி அதுல் சுபாஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஐடி ஊழியர் தற்கொலை:

இந்த சூழலில், பெங்களூரில் உள்ள தனது குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை தூக்கிட்டு அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுபாஷின் சடலத்தை மீட்டனர். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அவர் தனது தற்கொலைக்கு முன்பு 24 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், தனது மனைவி, தனது மனைவியின் குடும்பத்தினர், உத்தரபிரதேசத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆகியோரால் தான் பாதிக்கப்பட்டதாக எழுதியுள்ளார். அந்த நீதிபதி தனது தரப்பு வாதத்தை கேட்கவில்லை என்றும் எழுதியுள்ளார்.

தற்கொலை வீடியோ:

கடிதம் மட்டுமின்றி தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எந்த சம்பவங்கள் தன்னை தற்கொலைக்குத் தூண்டியது என்று வேதனையுடன் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் வரை தனது அஸ்தியை கரைக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய மனைவி குடும்பத்தினரிடம் இருந்து தன்னுடைய 4 வயது மகனை மீட்டு தனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுபாஷீின் சகோதரர் காவல்நிலையத்தில் தனது சகோதரரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். 

சுபாஷின் தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை பெங்களூரில்  ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் அவரது குடும்பத்தின் கொடுமையால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
சென்னை அருகே பரபரப்பு ; 3 பேர் கொலைக்கு பழிக்குப் பழியாக பிரபல ரவுடி நடுரோட்டில் வெட்டிக் கொலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை – ஒரு மாதம் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய கும்பல் !
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
திருமணமான 3 மாதத்தில் நர்சிங் மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம் ; சப்-கலெக்டர் ஜீப் முற்றுகை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Jose Charles Martin: மதத்தைக் காட்டி ஜோஸ் மார்ட்டினுக்கு அமைச்சர் பதவி மறுப்பா? பாண்டிச்சேரியில் நடப்பது என்ன?
Horse Trading : ‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? எதற்கு அரசியலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது..?
‘குதிரை பேரம்’ என்றால் என்ன ? சொல்ல காரணம் இதுதான்!
" அப்பா ஆட்சி நடப்பதாக உதயநிதி நினைக்கிறார் " அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் பதிலடி
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisami: புதிய கரகாட்ட கோஷ்டிக்கு விரைவில் பாடம்.. தவெக-வை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் இதோ
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ விமர்சனத்திற்குள்ளாகும் அமைச்சர்களின் செயல்பாடுகள்..!
’TVK அலுவலகமாக மாறிய தலைமைச் செயலகம்?’ இங்குதான் உறுப்பினர் சேர்க்கையா!
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
சொந்த ஊர் போறீங்களா? - பக்ரீத், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - டிக்கெட் புக் செய்வது எப்படி?
Embed widget