மேலும் அறிய

எப்போதும் போன் பேசுவியா? – மனைவியின் வாயை பசை போட்டு ஒட்டி கொல்ல முயன்ற கணவர்! அதிர்ச்சி

பெங்களூருவில், தனது மனைவியை பசை குடிக்க வைத்து கொலை செய்ய முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவியை கொலை செய்ய முயன்றபோது அவர் கத்தியதால் அவர் வாயை கணவர் பசை போட்டு ஒட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.  

பெங்களூருவில், தனது மனைவியை பசை குடிக்க வைத்து கொலை செய்ய முயன்றதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூருவின் புறநகரில் உள்ள தசனபுராவில் வசிப்பவர் சித்தலிங்கசாமி. இவர் தனியார் நிறுவத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரின் சொந்த ஊர் ராய்ச்சூர். இவரது மனைவி மஞ்சுளா. இருவருக்கும் திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சித்தலிங்கசாமியின் சொந்த ஊரான ராய்ச்சூரில் படித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கணவர் மனைவி இருவரும் வீட்டில் தனியாத்தான் இருக்கிறார்கள். இதனிடையே மனைவி மஞ்சுளா ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி போனில் யாருடனோ பேசி வந்ததாக கணவருக்கு சந்தேகம் எழுந்தது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்த வண்ணம் இருந்துள்ளது. கடந்த 11ஆம் தேதியும் இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கணவர் சித்த லிங்க சாமி, மனைவி மஞ்சுளாவின் கழுத்தை பிடித்து நெரித்து கொல்ல முயன்றுள்ளார். அப்போது மஞ்சுளா கத்தி சத்தம் போட்டுள்ளார்.

இதனால் கணவர் லிங்க சாமி வீட்டில் இருந்த ஃபெவி குயிகை மஞ்சுளாவின் வாயில் ஊற்றி ஒட்டினார். இதனால் மஞ்சுளா துடிதுடித்து போனார். இதைஅடுத்து அவர் மஞ்சுளாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார். அதற்குள் மஞ்சுளா ஏற்கெனவே கத்திய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர்.

இதைப்பார்த்த அவர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வீட்டில் வந்து பார்க்கும்போது மஞ்சுளாவின் வாய் பசையால் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் கழுத்தில் கொலை முயற்சி நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன.

இதைத்தொடர்ந்து போலீசார் மஞ்சுளாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மஞ்சுளா செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் அதனால் அவர் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் இவ்வாறு செய்ததாகவும் தெரியவந்தது.

இந்நிலையில், மனைவியை கொல்ல முயன்ற கணவரை மாதநாயக்கன்ஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
துக்க நிகழ்வுக்குச் சென்று திரும்பியபோது நேரிட்ட கொடூரம்: சீர்காழி அருகே உலுக்கிய சோகம்!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
சீர்காழி விபத்து எதிரொலி: நட்ட நடுரோட்டில் பேருந்துகளுக்குள் புகுந்து எஸ்பி சினேகா பிரியா அதிரடி வேட்டை!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?
வாடிக்கையாளர் போல் நடித்து 4 மாதமாக 50 சவரன் நகைகள் திருட்டு !! பெண் சிக்கியது எப்படி ?

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget