மேலும் அறிய

Kerala: பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியிடம் ஜோதிடர் செய்த வேலை.. கொந்தளித்த மக்கள்..

கொல்லத்தில் ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கேரளாவில் பேய் ஓட்டுவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள புதூர் பகுதியை அடுத்து வேந்தர் என்ற ஊரைச் சேர்ந்தவர் ராஜன் பாபு என்ற முராரி தந்திரி. 52 வயதான இவர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். அவரைக் காண தினமும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வருகை தருவது வழக்கமாகும். இப்படியான நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த முராரி தந்திரி ஆக்டிவாக இருப்பது வழக்கம்.  முராரி ஜோதிஷாலயம் என்ற முகநூல் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை வெளிட்டு அந்த மாநிலம் முழுக்க பிரபலமாகியுள்ளார். தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு அவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து ஜோதிடம் சொல்லி, ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் ராஜன் பாபு பணம் பறித்தும் வந்துள்ளார். 

இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தாயும், மகளும் ராஜன் பாபுவை சந்திக்க சென்றிருக்கின்றனர். அந்த சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதாகவும், அதனை ஓட்ட வேண்டும் எனவும் தாய் கூற, ஜோதிடர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி வேந்தரில் உள்ள தனது வீட்டில் சிறுமிக்கு பேயோட்டும் சடங்குகளை ராஜன் பாபு நடத்தியுள்ளார். தான் சிறுமியுடன் தனியாக நேரம் செலவிட விரும்புவதாகவும், அதனால் நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கும்படி தாயாரிடம் அவர் கூறியுள்ளார். 

அதன்படி தாய் வெளியே இருக்கவும், அறைக்கதவை மூடிய ராஜன் பாபு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வெளியே வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக மகளை அழைத்துக் கொண்டு காவல்துறையை நாடினார். அவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த ராஜன் பாபுவை தேடினர். அவரோ சிறுமி விவகாரத்தில் தன் வீட்டின் முன்னால் பலரும் வந்து போராட்டம் நடத்துவதைக் கண்டு ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அவரை தேடி சென்று கைது செய்த போலீசார் பாலியல் வன்கொடுமை, போக்சோ சட்டம் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதனிடையே குளக்கட பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் ஆர். ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜன் பாபு இதற்கு முன்னால் ஒரு ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது மூத்த ஜோதிடர் ஒருவரிடமிருந்து ஜோதிடம் கற்றுக்கொண்டு அதை தொழில் ரீதியாக ஏற்றுக்கொண்டார். ஜோதிடராக மாறுவதற்கு முன்பு அவர் முராரி என்று அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக நாங்கள் கேள்விப்பட்ட முதல் புகார் இது என தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget