மேலும் அறிய

7,189 ஆபாச படங்கள்; வலையில் சிக்கிய 443 குழந்தைகள் - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்

ஐஏஎஸ் அதிகாரி 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மருத்துவ அறிக்கைகள் அவருக்கு எதிராக இருந்தாலும், அதனை சிறுமிகள் தரப்பு சாட்சி அளிக்காததால் இணைக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிர ஐஏஎஸ் அதிகாரி மாருதி ஹரி சாவந்த் நான்கு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது 1போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சாட்சி கூற மறுத்ததால் மருத்துவ அறிக்கைகள் சாவந்திற்கு எதிராக இருந்தும் போக்ஸோவில் தண்டனை தரமுடியாது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

தீர்ப்பில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்களில் 7,189 ஆபாச படங்கள் மற்றும் 443 குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆபாச வீடியோக்கள் சாவந்தின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் இருந்துள்ளது. கடந்த வாரம், தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. சாவந்திற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்,  7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சாவந்த் பணிநீக்கம் செய்யப்பட்டது

விசாரணையின் போது, சாவந்த் தரப்பு அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தது. புனே முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) பள்ளியில் உள்ள ஒரு குழுவின் துணைத் தலைவராக ஒரு கார்ப்பரேட்டர் இருந்துள்ளார், அங்கு இந்த பாதிக்கப்பட்ட சிறுமிகள் படித்துள்ளனர். அப்போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் 2015 இல் மாருதி ஹரி சாவந்த் கைதுசெய்யப்படும்போது, வேளாண் துறையில் பணியமர்த்தப்பட்டிருந்தார். மஹாராஷ்டிரா வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சிலில் பொது இயக்குநராக பணியாற்றினார். அவர் உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்று விசாரணை அதிகாரி மிலிந்த் மோஹிதே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

7,189 ஆபாச படங்கள்; வலையில் சிக்கிய 443 குழந்தைகள் - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்

என்ன நடந்தது?

தீர்ப்பின்படி, ஹிங்கனே குர்தில் உள்ள பிஎம்சி பள்ளியில், ஆலோசகர் அனுராதா அமோல் வாக்மரே இந்த குற்றச்சாட்டுகளை முதலில் வெளியில் தெரியப்படுத்தினார். அப்போது 8 முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகள், சாவந்த் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகளுடன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தன்னிடம் கூறியதாக வாக்மரே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால் கொன்று விடுவோம் என சிறுமிகள் மிரட்டப்பட்டதாகவும் அவர் கூறினார். சிறார்களில் மூன்று பேரின் பெற்றோர்கள் கூலித்தொழிலாளிகளாக இருக்கும்போது, ​​ஒருவர் வாக்மரேயிடம், சாவந்தின் வீட்டில் வீட்டுப் பணியாளராகப் பணிபுரிந்ததாகக் கூறப்பட்டது. “நல்ல தொடுதல்” மற்றும் “கெட்ட தொடுதல்” பற்றி ஒரு நாள் சிறுமிகளுக்கு ஆலோசனை வழங்கியபோது நடந்த சம்பவத்தைப் பற்றி அந்தச் சிறுமிகள் தன்னிடம் தெரிவித்ததாக வாக்மரே தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து தான் இந்த விஷயத்தை வகுப்பு ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியையை அணுகி மாணவர்களின் பெற்றோரை அழைத்ததாகவும் கூறினார். தீர்ப்புக் குறிப்புகள், பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க உடனடியாகத் தயாராக இல்லை, முதலில் சிறுமிகளுடன் பேச விரும்புவதாகக் கூறினர். இருப்பினும், அவர்கள் இறுதியில் புகாரளிக்க ஒப்புக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்: வெளிநாட்டு டி20 தொடர்களில் தோனி அங்கம் வகிக்க வேண்டுமென்றால் இதை செய்ய வேண்டும்.. அது என்ன?

வழக்குப்பதிவு

2015 ஆம் ஆண்டில், சாவந்த் 376 (கற்பழிப்பு), 354 (பி) (எந்தவொரு பெண்ணையும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல் அல்லது அவளை நிர்வாணமாக இருக்க வற்புறுத்தும் நோக்கத்துடன் அத்தகைய செயலைத் தூண்டுதல்), 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார். IPC, POCSO சட்டம் (குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான 4 பிரிவுகள்), பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 இன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

7,189 ஆபாச படங்கள்; வலையில் சிக்கிய 443 குழந்தைகள் - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தண்டனை அறிவித்த நீதிமன்றம்

திருப்புமுனைகள்

நீதிமன்றத்தில் வழக்கு 2019 சமயத்தில், சாவந்தின் வீட்டில் பதிக்கப்பட்டவர்களுள் ஒருவரின் தாயார் உதவியாக இருந்ததாகக் கூறப்பட்டவர் அதை நீதிமன்றத்தில் மறுத்தார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் சாவந்தை அடையாளம் காண மறுத்தனர். சிறார்களின் மருத்துவ அறிக்கைகளைத் தயாரித்த மருத்துவர், அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடனான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டதாக தீர்ப்பு மேலும் கூறுகிறது. எவ்வாறாயினும், மருத்துவ அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும், காவல்துறை அறிக்கை எதுவும் தங்களுக்கு வாசிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பின் குறிப்புகளில் சிறுவர்கள் கூறினர். அறிக்கைகளைப் படிக்காமல் தங்கள் கட்டைவிரல் பதிவுகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியதாக தீர்ப்பு கூறுகிறது. இதன் அடிப்படையில், மருத்துவ சான்றுகள் உண்மையான சான்றுகளாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் கூறாத நிலையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவ சான்றுகளை குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் அவருக்கு குழந்தைகள் வன்புணர்வு வழக்கில் தண்டனை கொடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
Breaking News LIVE: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
Rasipalan: விருச்சிகத்துக்கு உதவி..தனுசுக்கு முயற்சி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: விருச்சிகத்துக்கு உதவி..தனுசுக்கு முயற்சி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
Kalki 2898 AD : பிரபாஸ் படத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்திய தெலங்கானா அரசு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
பிரபாஸ் படத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்திய தெலங்கானா அரசு.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
Embed widget