மேலும் அறிய

கொலைக்கு கொலைதான் தீர்வு.. கொடூர தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்து! சத்தமில்லாமல் நடந்த சம்பவம்!

தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்

ஆந்திராவில் கொலை சம்பவம் ஒன்றில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பாலகொண்டா டி.எஸ்.பி எம்.ஸ்ரவாணி கூறியுள்ள தகவலில், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கடைநிலை கிராமமான ரெகுலகுடாவில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ​​அதே கிராமத்தைச் சேர்ந்த சவர் கயா (வயது 60) என்பவரின் மகள் பத்மாவை மனவளர்ச்சி குன்றிய நபரான சவர் சிங்கண்ணா (33) என்பவர் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியான சவர் கயா சிங்கண்ணாவை கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கண்ணா கயாவை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாள் கயாவின் மகன்கள் சிங்கண்ணாவின் கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிங்கண்ணா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக இந்த சம்பவம் கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து பழங்குடியின தலைவர்கள் விசாரணை நடத்தினர். இதில் தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்.இல்லையென்றால் அவரின் குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். 

பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்  பஞ்சாயத்தில் மரணத்திற்கு மரணம் தான் தீர்வு என்ற அடிப்படையில் சிங்கண்ணாவை கொலை செய்யலாம் என கொடூர தீர்ப்பை வழங்கப்பட்டது. இதனை மறுத்தால் தாங்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சிய சிங்கண்ணாவின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி மே 28 ஆம் தேதி சிங்கண்ணா விஷம் கொடுக்கப்பட்டு அதன்பின் அவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. 

 கயா மற்றும் சிங்கண்ணாவின் மரணம் இயற்கையானது போல கிராம மக்கள் வழக்கம்போல பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் இந்த மரணங்கள் குறித்து தகவல் அறிந்த கிராம வருவாய் அலுவலர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அடுத்த இரண்டு நாட்களில் கொலைக்கு தூண்டியவர்கள், பஞ்சாயத்து மூலம் அதற்கு ஏற்பாடு செய்த தலைவர்கள் என 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
மனைவி மீது சந்தேகம் !! கணவனை கொன்று நாடகமாடிய மனைவி !! கொலைக்கு தம்பி உதவியா ?
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சிவகங்கை: மோசடி நிதி நிறுவனங்கள் வலையில் சிக்காதீர்! காவல்துறை எச்சரிக்கை, விழிப்புணர்வு அவசியம்! 🚨
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
சாத்தான்குளம் கொலை வழக்கு: குற்றவாளிகள் 9 பேரும் மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தரும் காரணம் என்ன?
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மது போதையில் கணவன் செய்த கொடூரம்! கரூரில் அதிர்ச்சி சம்பவம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
AIADMK Candidates List: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர்களை அறிவித்த எடப்பாடி- ஸ்டாலின், உதயநிதிக்கு யார்? திரு.வி.க. நகர் சர்ப்ரைஸ்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? BJP ஏமாற்றம்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? BJP ஏமாற்றம்
US Iran War Gulf Targeted: எச்சரித்த ஈரான் அதிபர்; குவைத், துபாயை போட்டு சாத்திய ஈரான் ஏவுகணைகள்; தவிக்கும் அரபு நாடுகள்.!
எச்சரித்த ஈரான் அதிபர்; குவைத், துபாயை போட்டு சாத்திய ஈரான் ஏவுகணைகள்; தவிக்கும் அரபு நாடுகள்.!
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
USA Iran War: ”உள்ள வந்துருவிங்களா? நரகத்திற்கு வெல்கம்” ஈரான் அருகே குவியும் அமெரிக்க படைகள் - தெஹ்ரான் வார்னிங்
Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்
Toyota Fortuner 2026: அப்க்ரேடட் ராஜாவாக வரும் டொயோட்டா ஃபார்ட்சுனர் - உள்ளே, வெளியே - குவியும் மாற்றங்கள்
US Report on Pak. Terror: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத குழுக்களுக்கு பாக். இன்னும் ஆதரவு; வெளியான அமெரிக்க அதிர்ச்சி ரிப்போர்ட்
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
MI Vs KKR: கடப்பாரை Vs வாரியர்ஸ் - மும்பையை தொடரும் 13 வருட சாபம்? பாண்ட்யா டீம் ரூ.25 கோடியை சமாளிக்குமா?
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
Embed widget