மேலும் அறிய

கொலைக்கு கொலைதான் தீர்வு.. கொடூர தீர்ப்பு வழங்கிய பஞ்சாயத்து! சத்தமில்லாமல் நடந்த சம்பவம்!

தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்

ஆந்திராவில் கொலை சம்பவம் ஒன்றில் கிராம பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பாலகொண்டா டி.எஸ்.பி எம்.ஸ்ரவாணி கூறியுள்ள தகவலில், ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கடைநிலை கிராமமான ரெகுலகுடாவில் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியின் போது ​​அதே கிராமத்தைச் சேர்ந்த சவர் கயா (வயது 60) என்பவரின் மகள் பத்மாவை மனவளர்ச்சி குன்றிய நபரான சவர் சிங்கண்ணா (33) என்பவர் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியான சவர் கயா சிங்கண்ணாவை கீழே தள்ளியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கண்ணா கயாவை கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு மறுநாள் கயாவின் மகன்கள் சிங்கண்ணாவின் கை, கால்களை கட்டி வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிங்கண்ணா குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

உடனடியாக இந்த சம்பவம் கிராம பஞ்சாயத்தின் கவனத்திற்கு கொண்டு செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து பழங்குடியின தலைவர்கள் விசாரணை நடத்தினர். இதில் தங்களது தந்தை இறந்துவிட்டதால் சிங்கண்ணாவும் இறக்க வேண்டும் என்று கயாவின் மகன்கள் கூறினர்.இல்லையென்றால் அவரின் குடும்பத்தில் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். 

பஞ்சாயத்தின் கொடூர தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்  பஞ்சாயத்தில் மரணத்திற்கு மரணம் தான் தீர்வு என்ற அடிப்படையில் சிங்கண்ணாவை கொலை செய்யலாம் என கொடூர தீர்ப்பை வழங்கப்பட்டது. இதனை மறுத்தால் தாங்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சிய சிங்கண்ணாவின் குடும்பத்தினர் இதற்கு ஒப்புக் கொண்டனர். அதன்படி மே 28 ஆம் தேதி சிங்கண்ணா விஷம் கொடுக்கப்பட்டு அதன்பின் அவர் தூக்கிலிடப்பட்டார். பின்னர் யாருக்கும் தெரியாமல் அவரது சடலம் எரியூட்டப்பட்டது. 

 கயா மற்றும் சிங்கண்ணாவின் மரணம் இயற்கையானது போல கிராம மக்கள் வழக்கம்போல பணிகளை மேற்கொள்ள தொடங்கினர். ஆனால் இந்த மரணங்கள் குறித்து தகவல் அறிந்த கிராம வருவாய் அலுவலர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். இதனையடுத்து விசாரணையில் இறங்கிய போலீசார் அடுத்த இரண்டு நாட்களில் கொலைக்கு தூண்டியவர்கள், பஞ்சாயத்து மூலம் அதற்கு ஏற்பாடு செய்த தலைவர்கள் என 16 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget