மேலும் அறிய

 3ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: சிக்கிய 3 சிறுவர்கள்! ஆந்திராவில் அதிர்ச்சி

3ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியிருப்பது பெற்றோர் மத்தியில் பயத்தை உண்டுபண்ணியுள்ளது.

ஆந்திராவில் 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி  அதேப்பள்ளியைச் சேர்ந்த 3 சிறுவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசாரின் தகவலின் படி, பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் வீட்டின் அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது சிறுமி படிக்கும் அதேப் பள்ளியைச் சேர்ந்த 12 வயதுடைய 6 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுவர்களும் 13 வயதுடைய 7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனும் என 3 சிறுவர்கள் பூங்காவிற்கு வந்துள்ளனர். 

தொடர்ந்து சிறுமியிடம் விளையாடலாம் வா என ஆளில்லாத இடத்திற்கு  3 சிறுவர்களும் சிறுமியை அழைத்துச்சென்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த  இடத்தில் அவர் இல்லாததால் அவருடைய பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். 

அப்போதும் அவர் எங்கும் காணாததால் இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தகவல் ஏதும் கிடைக்காததால் போலீசார் துப்பு துலக்கும் நாய் மூலம் சோதனையை மேற்கொண்டனர். 

அப்போது போலீஸின் மோப்ப நாய் அந்த குறிப்பிட்ட 3 சிறுவர்களை அடையாளம் காட்டியது. இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன. 

அதாவது சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற சிறுவர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட கால்வாயில் சிறுமியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரின் உடல் இன்னும் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுமியின் உடல் இன்னும் மீட்கப்படாததால், இந்த வழக்கு இன்னும் காணாமல் போன நபரின் விசாரணையாகவே கருதப்படுகிறது என்று முச்சுமாரி காவல் நிலையத்தின் துணை காவல் ஆய்வாளர் ஜெய்சேகர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget