மேலும் அறிய

தாய், தந்தையிடமிருந்து சொத்தை அபகரித்துக்கொண்ட மகன்.. சட்டப்போராட்டம் நடத்தும் முதியவர்கள்

விழுப்புரம்: தாய், தந்தையிடமிருந்து சொத்தை அபகரித்து கொண்ட மகன்.. வீட்டு வாசலில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் வயதான தம்பதியனர்..

விழுப்புரம் : கோட்டகுப்பம் அருகே மாத்தூரில் தாய், தந்தையிடமிருந்து சொத்தை அபகரித்துகொண்ட மகனுக்கு எதிராக, அவர்களை வீட்டைவிட்டு வெளியாற்றி பூட்டி சென்றதால், கடந்த ஒரு வாரமாக வயதான தம்பதியனர் வீட்டு வாசலில் சட்டப் போராட்டம் நடத்தி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த மாத்தூரைச் சேர்ந்த விவசாயி  மாரிமுத்து (69). இவரது முதல் மனைவி இறந்த நிலையில், மனைவியின் தங்கையான லட்சுமியை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், இவரின் முதல் மனைவிக்கு கோவிந்தராஜ் (42) வெங்கடேஷ் (40) என்ற இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவிக்கு சங்கரி (35) என்ற மகளும் உள்ளனர், இந்த நிலையில் கடந்த 2008-ஆம் ஆண்டு இரண்டு மகன்கள் மற்றும் மகளுக்கு தனது விவசாய நிலத்தை பாகப்பிரிவினை செய்து எழுதி வைத்தார் மாரிமுத்து.

இதில் தாங்கள் வசித்த வந்த வீட்டை, இளைய மகன் வெங்கடேஷ் சேர்த்து எழுதி கொண்டுள்ளார், பின்னர் 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட வெங்கடேஷ் 2017 ஆம் ஆண்டு  வயதான பெற்றோர் இருவரையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றி உள்ளார், இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய வயதான தம்பதியினர், தங்கள் வீட்டை மீட்டுத்தரக்கோரி கோட்டாசியர் மற்றும் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய கோட்டாசியர், வயதான தம்பதியினரை தாங்கள் சாகும் வரை இளைய மகன் வெங்கடேஷ் தன்னுடைய வீட்டில் வைத்து பராமரிக்கவும், மகன் மற்றும் மகள் சேர்ந்து மாதந்தோறும் ரூபாய் 5 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டனர்,

இதனை தொடர்ந்து கடந்த வாரம் வாடகை வீட்டிலிருந்து பொருட்களை எடுத்துகொண்டு, மாரிமுத்து தம்பதியினர் இளைய மகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வெங்கடேஷ் இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல், வீட்டை பூட்டிக்கொண்டு வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்து தனது மாமியார் வீட்டிற்கு கூடி பெயர்ந்தார்.

இதனால் செய்வதறியாமல் தவித்து வரும் வயதான தம்பதியினர், கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீட்டின் வெளியே கட்டில், பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்களுடன் காத்துகிடக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் கோட்டக்குப்பம் ஆய்வாளரிடம் கேட்டபோது அவர் கோட்டாட்சியரிடம் போய் கேட்க சொல்வதும், கோட்டாசியரிடம் கேட்டால் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் கேட்க சொல்வதுமாக இந்த தம்பதியினரை அலைக்கழித்து வருவதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தங்களது வீட்டை மீட்டு தங்கள் உள்ள வரை அங்கு வாழ அரசு வழிவகை செய்து தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Embed widget