மேலும் அறிய

கேரள கடற்கரையில் அமெரிக்க பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

அவர்கள் கொடுத்த சிகரெட்டை மறுத்த பின்னர், இருவரும் அவருக்கு அவர்களிடம் இருந்த மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். அந்த பெண் மது அருந்த ஆரம்பித்தவுடன், போதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கேரளாவில் தங்கியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவரை கொல்லம் அருகே உள்ள ஆசிரமத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவர் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டனர். ஆசிரமத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் பெண் தனியாக இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் அமெரிக்க பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை

ஆசிரமம் அருகே கடற்கரையில் தனியாக அமர்ந்திருந்த 41 வயது அமெரிக்க பெண் கடந்த ஜூலை 31ஆம் தேதி இரண்டு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கபட்ட பெண்ணின் புகாரின்படி, அந்த இரு ஆண்களும் இந்த பெண்ணை அணுகி சிகரெட்டைக் கொடுத்ததாக போலிஸார் தெரிவித்தனர். ஆனால் அவர் அவர்கள் கொடுத்த சிகரெட்டை மறுத்துள்ளார். பின்னர் அந்த இருவரும் அவருக்கு அவர்களிடம் இருந்த மதுவை குடிக்க கொடுத்துள்ளனர். அந்த பெண் மது அருந்த ஆரம்பித்தவுடன், போதையில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கேரள கடற்கரையில் அமெரிக்க பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

வழக்குப்பதிவு

PTI இன் தகவ்களின்படி, குற்றம் சாட்டப்பட்ட இரு நபர்கள் மீது IPC 376D (கூட்டுப் பாலியல் வன்கொடுமை) மற்றும் 376(2)(n) (ஒரே பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கருநாகப்பள்ளி காவல் நிலைய அதிகாரி கூறுகையில், "குற்றத்தில் ஈடுபட்ட நபர்களின் கைது இன்னும் பதிவு செய்யப்படவில்லை, அவர்கள் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் மட்டுமே உள்ளனர்," என்றார். 

தொடர்புடைய செய்திகள்: IND vs WI: 13வது முறையாக தொடர்.. அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஆட்டிபடைக்கும் இந்தியா!

அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்

அமெரிக்க பெண்ணுக்கு 'ரம்' கொடுத்து அவர் மதுபோதையில் இருந்தபோது அவரை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த இருவரும் அமெரிக்க பெண்ணை ஒரு பைக்கில், அருகில் உள்ள காலி வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பிடிஐ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு அந்தப் பெண் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவர் ஜூலை 22ஆம் தேதி கேரளாவுக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கேரள கடற்கரையில் அமெரிக்க பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை…

ஐந்தாண்டுகளுக்கு முன் இதே போன்ற சம்பவம்

இதற்கிடையில் ஐந்து ஆண்டுகள் முன்பு லாட்வியன் பெண் ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில், இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உமேஷ் மற்றும் உதயன்குமார் என அடையாளம் காணப்பட்டனர். மார்ச் 14, 2018 அன்று, லாட்வியாவில் இருந்து வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வர்கலா கடற்கரையில் காணாமல் போனார். அந்த பெண் கடைசியாக ஆட்டோ ரிக்ஷாவில் கோவளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்லவில்லை. பின்னர், போலீசார் அவரது உடலை ஏப்ரல் 20, 2018 அன்று மீட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் ஆண்ட்ரூ மற்றும் சகோதரி இல்சியுடன் வந்திருந்தார் என்று கூறப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக மூவரும் கேரளா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
இன்ஸ்டாகிராமில் ஆபாசப் படம் , அவதூறு !! சென்னையில் பட்டதாரி பெண்ணை மிரட்டிய வாலிபர்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
கள்ளக் காதலை துண்டித்த பூ வியாபாரியின் மனைவி கொடூர கொலை !! மாடியில் இருந்து குதித்த காதலன்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
மகன் கைது பயம் !! ரூ.50 ஆயிரம் 'ஜி-பே' நகைகள் பறிப்பு !! சென்னையில் சிக்கிய போலி போலீசார்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
போலீஸ் உடையில் மிருகம் !! சிறுவனுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த தலைமை காவலர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
Vijayabaskar: ’’தவெகவில் இணைகிறேனா? அவர்களின் முடிவுதான் என்னுடையதும்’’ மனம் திறந்த விஜயபாஸ்கர்!
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
Embed widget