மேலும் அறிய

மணிகண்டனுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க : உயர்நீதிமன்றம் சென்ற சாந்தினி

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மணிகண்டனோடு  சென்றதாகவும், தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே தன்னை அழைத்துச் சென்றதாகவும் சாந்தினி குற்றம் சாட்டியுள்ளார்

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்க  எதிர்ப்பு தெரிவித்து நாடோடிகள் பட நடிகை சாந்தினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் மணிகண்டனோடு கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்து , அந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்ற போது, தன்னை கட்டாயப்படுத்தி கருவைக் கலைக்கச் செய்ததாகவும், நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை சாந்தினி கடந்த வாரம் சென்னை காவல் ஆணையரிடம்  புகார் அளித்தார்.

சாந்தினியின் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல்,  பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவுச் செய்தனர்.  


மணிகண்டனுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க : உயர்நீதிமன்றம் சென்ற சாந்தினி

காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அடுத்து கைது செய்யப்படலாம என நினைத்த மணிகண்டன், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தார். மனுவில், திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தனக்கு எதிராக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளதாகவும், சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலாக செயல்பட்டு வரும் சாந்தினி மலேஷியாவில் இதுபோல பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.


மணிகண்டனுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க : உயர்நீதிமன்றம் சென்ற சாந்தினி

இந்நிலையில் மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்க கூடாது என்று நடிகை சாந்தினி மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், திருமண வாழ்வு சிறப்பாக அமையவில்லை என்றும் அதனால் தன்னால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். தன்னைப் போல ஒரு பெண் தனக்கு கிடைத்தால் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என அவர் தெரிவித்ததாகவும்,  ஆனால்  தான் முதலில் இதை மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் முதல் மனைவியிடம்  சட்டப்படி விவாகரத்து பெற்று, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்ததால் மணிகண்டனோடு வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார்.


மணிகண்டனுக்கு ஜாமீன் கொடுக்காதீங்க : உயர்நீதிமன்றம் சென்ற சாந்தினி

டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு மணிகண்டனோடு  சென்றதாகவும், தமிழக சட்டமன்றத்திற்கு பார்வையாளராக மனைவி என்ற அடிப்படையிலேயே தன்னை அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ள சாந்தினி,  மூன்று முறை கருத்தரித்த போது கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், தன்னுடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதையெல்லாம் தான் சகித்துக் கொண்டதாகவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 

 இருவரின் மனுக்களும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
Embed widget