மேலும் அறிய

ABP நாடு எதிரொலி: லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியா் பணியிடை நீக்கம்!

ஜமுனாமரத்தூர் அருகே லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர் மேல்பட்டு, சந்தவாசல், போளூர் ஆகிய வனசரகங்கள் உள்ளது. இந்த ஜவ்வாது மலையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வாழக்கூடிய மலைவாழ் மக்கள் தங்களுடைய விலை நிலத்தில் விலையகூடிய திணை, கேழ்வரகு, பலாப்பழம் ,சீதாப்பழம் ,வாழைப்பழம் உள்ளிட்டவற்றை விலையவைத்து மலையின் கீழே உள்ள வேலூர், போளூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, செங்கம், உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவர்கள்.  இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு ஜவ்வாது மலையில் சந்தன மரங்கள் இல்லை என்ற நிலை உருவானது. இதனால் சந்தன கடத்தல் வழக்குகள் முற்றிலும் குறைந்து விட்டன. மலைப்பகுதியில் அட்டகாசம் செய்து வந்த வன ஊழியர்கள் பலர் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது படித்த பட்டதாரி இளைஞர்கள் வனத்துறையில் பணியாற்றுவதால் மலைவாழ் மக்களுக்கு எந்தவித நெருக்கடிகள் இல்லாமல் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

 

 

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஜவ்வாது மலை நாடானூர் வனச்சாரகத்திற்கு உட்பட்ட கல்லாத்தூர் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட சீதாப்பழம் லாரியின் மூலம் சென்னைக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருந்துள்ளது. அங்கு வந்த வனக்காப்பாளர் சதீஷ்குமார் வயது (35) என்பவர் சீதாப்பழம் லோடு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனில் 1000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என மிரட்டியுள்ளார். அதற்கு மலைவாழ் மக்கள் நாங்கள் வனப்பகுதியில் இருந்து எடுத்து செல்லவில்லை விவசாய நிலங்களில் இயற்கையாக விளையும் பழங்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறோம், இதை கேட்டபதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லை பட்டா நிலத்திலிருந்து எடுத்து செல்வதற்கு கிராம உதவியாளர் தான் கேள்வி கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வன ஊழியர் நான் சீதாப்பழத்துக்கு பணம் கேட்கவில்லை அதன் மேலே போட்டு வைத்துள்ள இலைகளை வனப்பகுதியில் இருந்து எடுத்து உள்ளீர்கள், அதற்கு தான் அபராதம் விதித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி சொன்னால் தாசில்தார் வந்து 50 ஆயிரம் கேட்பார்கள் கொடுத்துவிட்டு போங்க எனக்கு சந்தோசம் தான் என்று கூறினாராம்.

 


ABP நாடு எதிரொலி: லஞ்சம் கேட்டு மிரட்டிய வன ஊழியா் பணியிடை நீக்கம்!

சிறிது நேரத்தில் நான் அபராதம் போட்டால் கட்ட மாட்டீங்களா வண்டியை நிறுத்துங்கடா நான் வண்டியை சோதனை போடணும் இதில் சாராயம் கடத்துவதாக எனக்கு புகார் வந்துள்ளது என நான் கூறுவேன். நாங்கள் லோடு இறக்க மாட்டோம் பணமும் தர மாட்டோம் இதுவரைக்கும் நாங்கள் சீதாப்பழத்திற்காக யாருக்கும் பணம் கொடுத்ததில்லை உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என பதிலுக்கு மலைவாழ் மக்கள் கண்டிப்புடன் பேசினர். இதற்கு வனத்துறை அலுவலருடன் மலைவாழ் மக்களுக்கும் இடையே நடந்த காரசார உரையாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது. இதனை ஏபிபி நாடு செய்தி நிறுவனத்தின் மூலம் செய்தி வெளியிட்டு இருந்தோம், அதன் அடிப்படையிலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வன அதிகாரிகளுக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார். இதனையடுத்து வன அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் லஞ்சம் கேட்டு மிரட்டிய வன காப்பாளர் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவிட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget