மேலும் அறிய

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்த காவலர்.. உ.பியில் பயங்கரம்!

உத்தரப் பிரதேசத்தின் மொரதாபாத் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை வன்கொடுமை செய்து வந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மொரதாபாத் பகுதியில் காவல்துறை அதிகாரி ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை வன்கொடுமை செய்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரி திருமணமானவர் என்றும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்திற்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மருத்துவப் பணியாளரான பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2019ஆம் ஆண்டு, மற்றொரு ஆணின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரி, கடந்த 2020ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவதாகக் கூறி, அவர் வீட்டில் தனியாக இருந்த போது, துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. 

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்த காவலர்.. உ.பியில் பயங்கரம்!

பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே கொடுத்த புகாரில், தன்னிடம் போலியான பெயருடன் ஒரு நபர் பழகி, திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். அந்த நபரின் அடையாளம் தெரிய வந்தவுடன், அவர் தன்னை மதம் மாறக் கூறுவதாகக் கூறி, முந்தைய வழக்கைப் பதிவு செய்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இந்த விசாரணையின் போது, தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி, தான் உதவுவதாகக் கூறியுள்ளார். 

பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரம் தொடர்பாக உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்ற போது, குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி புகார் அளிக்க வேண்டாம் எனக் கூறி, சமாதானம் செய்ததோடு, திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு, அவரோடு வாழ்ந்து வந்த பாதிக்கப்பட்ட பெண், சமீபத்தில் அந்தக் காவல்துறை அதிகாரி திருமணம் ஆனவர் என்பதும், அவருக்குக் குழந்தை இருப்பதும், அவரது குடும்பம் பேரலி நகரத்தில் வாழ்ந்து வருவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இந்த விவகாரத்தை வெளியில் கூறினால், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளார் காவல் அதிகாரி. 

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை துப்பாக்கி முனையில் வன்கொடுமை செய்த காவலர்.. உ.பியில் பயங்கரம்!

இதுகுறித்து பேட்டியளித்துள்ள மொரதாபாத் காவல்துறை உயரதிகாரி ஒருவர், `வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து எழுத்துப்பூர்வமாகப் புகார் ஒன்றைப் பெற்றுள்ளோம். அவர் காவல்துறை அதிகாரி ஒருவரால் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். எனவே குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியின் மீது சட்டப்பிரிவுகள் 376 (வன்கொடுமை), 506 (கொலை மிரட்டல்), 504 (அமைதி குலைவை தூண்ட கருதி அவமதிப்பு செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அவர் தற்போது பணியாற்றும் காவல் நிலையத்திலும் அவர் குறித்து தகவல்களை வழங்கியுள்ளோம். மேலும், அவர் மீது துறை சார்ந்த விசாரணை நடைபெறும்’ எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget